tag:blogger.com,1999:blog-135494182024-03-07T01:51:03.308-08:00ஒரு கலகக்காரனின் கனவுலகம்இ.இசாக்http://www.blogger.com/profile/14128058077624270987noreply@blogger.comBlogger147125tag:blogger.com,1999:blog-13549418.post-74483196457660310922016-04-02T01:32:00.002-07:002016-04-07T05:21:23.848-07:00உழைப்பாளியின் வியர்வைக்குறிப்புகள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjrdAFUaOAmwLIr8KUkAMs47ngmfIAf6KRg4sJ-QNh0JWZPHCgL-d6HOIj3hIeLKXjL0ViDPyoWlJk8eiEqmKTA1Ph3GPmfxtn0EBjGDyzEDKpidyJwx1Z6QJS1W18CE-7QlKSdYA/s1600/400431_4143537239460_2026140190_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjrdAFUaOAmwLIr8KUkAMs47ngmfIAf6KRg4sJ-QNh0JWZPHCgL-d6HOIj3hIeLKXjL0ViDPyoWlJk8eiEqmKTA1Ph3GPmfxtn0EBjGDyzEDKpidyJwx1Z6QJS1W18CE-7QlKSdYA/s320/400431_4143537239460_2026140190_n.jpg" width="227" /></a></div>
<br /></div>
<div class="blogger-post-footer">¾?¢?? ???? §????
¾?¢? ¾?? ???? §?÷</div>இ.இசாக்http://www.blogger.com/profile/14128058077624270987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13549418.post-82885824143603829312016-04-02T01:06:00.000-07:002016-04-02T01:06:13.764-07:00கால்சட்டைக்கால குறிப்புகள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<h3 class="post-title entry-title" itemprop="name" style="background-color: white; color: #5d5d5d; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 22px; font-stretch: normal; font-weight: normal; margin: 0.75em 0px 0px; position: relative;">
<a href="http://ishaqpakkam.blogspot.in/2011/10/blog-post.html" style="color: #949494; text-decoration: none;">கால்சட்டைக்கால குறிப்புகள்</a></h3>
<div class="post-header" style="background-color: white; color: #5d5d5d; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 10.8px; line-height: 1.6; margin: 0px 0px 1.5em;">
<div class="post-header-line-1">
</div>
</div>
<div class="post-body entry-content" id="post-body-904407674636807409" itemprop="description articleBody" style="background-color: white; color: #5d5d5d; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.2px; line-height: 1.4; position: relative; width: 520px;">
<span style="font-size: 11.22px;"><span style="font-weight: bold;">1</span><br /><span style="font-weight: bold;">ப</span>ள்ளிக்கூட இடைவேளை நேரத்தில்<br />சிவன்கோயிலினுள்<br />நானும் ரவியும்<br />பதுங்கிக்கொள்வோம்<br />உள்ளே சுற்றித்திறிந்து<br />தேடிப்பிடித்து மகிழ்வான் தாமஸ்<br /><br /><br /><span style="font-weight: bold;">2</span><br /><span style="font-weight: bold;">வெ</span>ளியூரிலிருந்து<br />செங்கல்சூளைகளுக்கு<br />கல் அருக்க<br />வந்தவர்களுக்கு<br />வாய்த்ததெல்லாம்<br />வெய்யிலும்<br />மழையும்தான்<br /><br /><br /><span style="font-weight: bold;">3</span><br /><span style="font-weight: bold;">பெ</span>ரிய ஏரியின்<br />மீன் பிடித்திருவிழாவில்<br />கால்சட்டைப் பைகளுக்குள் பதுங்கிய<br />மீன்களின் பெயர்களும்<br />நினைவில் இல்லை இன்று<br />எல்லாவற்றையும்<br />மீன்கள் என்றே<br />சொல்லிப்பழகிக்கொண்டேன்<br /><br /><br /><span style="font-weight: bold;">4</span><br /><span style="font-weight: bold;">ஏ</span>ரி கோடிபோகும் நாளில்<br />கிடைக்கும்<br />பள்ளி விடுமுறைகளை<br />விழுங்கிக்கொண்டு<br />எழுந்து நின்றது<br />புதிய பாலம்<br /><br /><br /><span style="font-weight: bold;">5</span><br /><span style="font-weight: bold;">ஓ</span>டிவிளையாடிய போது<br />கால்களை பழுதாக்கிய கருவேலமரங்களும்<br />துள்ளத்துள்ள ரசித்தாலும்<br />நெருங்கிய கையில் குருதி பார்த்த<br />கெளுத்திமீன்களும்<br />எதிரிகள் என்று<br />அப்போதெனக்கு தெரியாது<br /><br />நன்றி : தாமரை அக்டோபர்</span></div>
</div>
<div class="blogger-post-footer">¾?¢?? ???? §????
¾?¢? ¾?? ???? §?÷</div>இ.இசாக்http://www.blogger.com/profile/14128058077624270987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13549418.post-70891433291294259202016-04-02T01:04:00.002-07:002016-04-02T01:05:27.742-07:00கால்சட்டைக்கால குறிப்புகள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="background-color: white; color: #5d5d5d; font-family: "arial" , "tahoma" , "helvetica" , "freesans" , sans-serif; font-size: 13.2px; font-weight: bold; line-height: 18.48px;">கால்சட்டைக்கால குறிப்புகள்</span><br />
<span style="background-color: white; color: #5d5d5d; font-family: "arial" , "tahoma" , "helvetica" , "freesans" , sans-serif; font-size: 13.2px; font-weight: bold; line-height: 18.48px;">இசாக்</span><br />
<br style="background-color: white; color: #5d5d5d; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.2px; line-height: 18.48px;" />
<span style="background-color: white; color: #5d5d5d; font-family: "arial" , "tahoma" , "helvetica" , "freesans" , sans-serif; font-size: 11.22px;"><span style="font-weight: bold;">1</span><br /><span style="font-weight: bold;">அ</span>டைமழை வெள்ளத்தில்<br />அடித்துக்கொண்டுவந்த<br />கப்பல்<br />கவிழ்ந்துக் கிடந்தது<br />எங்கள் வீட்டுவாசலில்<br />யார் விட்டதாக இருக்கும்?<br /><br /><span style="font-weight: bold;">2</span><br /><span style="font-weight: bold;">அ</span>ய்யனார்கோயில்<br />இளுப்பைத் தோப்பில்<br />மரம் ஏறி<br />பழம்பறிக்க உதவிய கல்குதிரை<br />பறித்துப்போட்ட கிளி<br />அஃரிணைகளாகவா இருக்கும்?<br /><br /><span style="font-weight: bold;">3</span><br /><span style="font-weight: bold;">பு</span>திதாக வாங்கிவந்த<br />சிப்பாய் பொம்மையின் முன்னிலையில்<br />காணாமல் போனது<br />என் பென்சிலும் அழிப்பானும்<br />சிப்பாய் என்றாலும்<br />பொம்மை பொம்மைதானே<br /><br /><span style="font-weight: bold;">4</span><br /><span style="font-weight: bold;">இ</span>ந்திரா காந்தி<br />சுடப்பட்டு இறந்த அன்று<br />குடும்பமே தெருவில் நின்று<br />கதறி அழுத்து<br />எங்கள்<br />வீடு<br />தீப்பற்றி எரிந்ததால்.<br /><br /><span style="font-weight: bold;">5</span><br /><span style="font-weight: bold;">ச</span>ண்டைக்காரன் வீட்டு கொள்ளையில்<br />கரும்பு உடைத்துத் தின்றதை<br />எப்படி மறுத்தாலும்<br />நம்ப மறுப்பார்<br />கிழிபட்ட உதடுகளைப் பார்த்த அப்பா<br /><br />நன்றி: கல்கி, அக் 16</span></div>
<div class="blogger-post-footer">¾?¢?? ???? §????
¾?¢? ¾?? ???? §?÷</div>இ.இசாக்http://www.blogger.com/profile/14128058077624270987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13549418.post-45953579667395592682013-12-31T02:48:00.002-08:002013-12-31T03:08:44.702-08:00சூரியன்கள் ஒளிகுடித்த நிலாச்சோலை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg1aNsTMsF0zFZZVIO74cHl8khXtSoInwjn2BgvUB26tC0xV0J8jsFrZ7SbdAW-k-xZ38Rs9V2tfVgUXciDVH1BR80HJPxTp3O2ZB_elfxBuzTfG2kLQYErvoLSWvcbNAgrp_F_oQ/s1600/DSCN7170a.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg1aNsTMsF0zFZZVIO74cHl8khXtSoInwjn2BgvUB26tC0xV0J8jsFrZ7SbdAW-k-xZ38Rs9V2tfVgUXciDVH1BR80HJPxTp3O2ZB_elfxBuzTfG2kLQYErvoLSWvcbNAgrp_F_oQ/s400/DSCN7170a.jpg" /></a><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiVhHNljImzEEL25A8RUUYH5qfVk9X_Tm5aZZrRlUTmsCaXo8Z1w99GcX15GBgA3yCdmk9ibepV_wc6Tvi8HxmxRU5zR3rvBvN3ZnZ9wKM8K_QxT-FRrL99lM0bVcfKq6hcgNegkQ/s1600/DSCN7170.jpg" imageanchor="1"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiVhHNljImzEEL25A8RUUYH5qfVk9X_Tm5aZZrRlUTmsCaXo8Z1w99GcX15GBgA3yCdmk9ibepV_wc6Tvi8HxmxRU5zR3rvBvN3ZnZ9wKM8K_QxT-FRrL99lM0bVcfKq6hcgNegkQ/s400/DSCN7170.jpg" /></a>
<b> </b><br />
<br />
<b>சூரியன்கள்
ஒளிகுடித்த
நிலாச்சோலை</b><br />
<br />
#<br />
<br />
<br />
எப்போதோ நிகழ்ந்தது<br />
இப்போது நடந்ததைபோல<br />
பசுமையாக நினைவில்<br />
<br />
தமிழோசை<br />
அரங்கேற்றம் அலுவகத்திற்கு<br />
அருகெதிரில்<br />
73 அபிபுல்லா சாலை<br />
<br />
தான் இயக்கவிருந்த<br />
“உள்ளேன் அய்யா” தொடக்கப் பணியில்<br />
அண்ணன் அறிவுமதி<br />
மூழ்கியிருந்த தருணம்<br />
“உள்ளேன் அண்ணா” என<br />
தம்பியாகி நெருக்கமானேன்.<br />
<br />
பல துறைகளில்<br />
இப்போது வெளிச்சப்பட்டுவிட்ட<br />
பல முகங்கள்<br />
அங்கே<br />
அங்குமிங்கும்<br />
அலைந்துத்திரிந்த பரபரப்பு.<br />
<br />
முன்னோடி படைப்பாளிகள்<br />
“தம்பி” என்றும்<br />
துளிர் படைப்பாளிகள்<br />
”அண்ணா” என்றும்<br />
அன்பு தெளித்து<br />
அழகுத் தமிழ் வரைந்த<br />
சாரல் வீசும்<br />
தொன்ம வாசல்<br />
<br />
மெட்டு ஏர் பிடித்து<br />
ஒழுங்குமாறாமல்<br />
சொல்கள் தூவி<br />
நல்லத் தமிழ்ப் பாடல்களை<br />
விளைவித்த நிலம்.<br />
<br />
நூல்கள்<br />
புதிய வடிவில்வர<br />
உறவுகள் கூடி<br />
இரவுகளைத்திண்று<br />
இலக்கிய விருந்து<br />
சமைத்த பொழுதுகள்.<br />
<br />
தாய்மைத் ததும்பும் அன்பும்<br />
ஆத்திரம் மிக்க கொள்கைக் கோபமும்<br />
சமவிகிதத்தில்<br />
பரிமாறப்பட்ட<br />
உன்னதக்கூடம்.<br />
<br />
வயதில் முதியவரெனில்<br />
”வாங்க அண்ணா” என்றும்<br />
இளையவரெனில்<br />
“வாங்க தம்பி” என்றும்<br />
உள்ளே அழைத்து <br />
உறவாக்கிக்கொள்ளும்<br />
உயிர்பிழியும் தமிழ்க்குரல் ஒலிக்கும்<br />
அற்புத அறை<br />
<br />
அண்ணை<br />
தம்பிகளைப் பிரசவித்த<br />
அதிசய<br />
வைத்திய சாலை<br />
73 அபிபுல்லா சாலை.<br />
<br />
பொருள்களையும் மனிதர்களையும்<br />
வழியனுப்பிவிட்டு<br />
நினைவுகளையும் உணர்வுகளையும்<br />
நிறைத்துக்கொண்ட<br />
189 அபிபுல்லா சாலையில்<br />
அசையா உயிராகவும்<br />
அப்பழுக்கற்ற உறவாகவும்<br />
எங்களில் கலந்திருந்த<br />
பூவரசும் வேப்பமும்<br />
இப்போதும்<br />
நிழல் தர காத்திரும்<br />
இளைப்பாற<br />
ஆயத்தமா?<br />
<br />
<br />
இசாக்<br />
29, திசம்பர் 2013</div>
<div class="blogger-post-footer">¾?¢?? ???? §????
¾?¢? ¾?? ???? §?÷</div>இ.இசாக்http://www.blogger.com/profile/14128058077624270987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13549418.post-618404351063660082012-03-04T23:29:00.000-08:002012-03-04T23:29:36.520-08:00தமிழ் அலை இடமாற்றம்<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1iV0Oad1P1bru7v5i0TMhnn2mfgAS1jpCWUul8tESD4_PLNNt9mlffgDd1yQr33LwNW-lrZAZV-LA5572G_4Hw8V-bqBy2OHInsWFDTcvsZJVYGHbDnLe8tszqwtMLY1J9g4imw/s1600/Tamil+alai+matram.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"><img border="0" height="320" width="213" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1iV0Oad1P1bru7v5i0TMhnn2mfgAS1jpCWUul8tESD4_PLNNt9mlffgDd1yQr33LwNW-lrZAZV-LA5572G_4Hw8V-bqBy2OHInsWFDTcvsZJVYGHbDnLe8tszqwtMLY1J9g4imw/s320/Tamil+alai+matram.jpg" /></a></div><div class="blogger-post-footer">¾?¢?? ???? §????
¾?¢? ¾?? ???? §?÷</div>இ.இசாக்http://www.blogger.com/profile/14128058077624270987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13549418.post-18462076238663794922011-10-13T22:40:00.005-07:002011-11-01T06:06:03.871-07:00பிள்ளைகளின் பிரதேசம்<b>பிள்ளைகளின் பிரதேசம்</b><br />
இசாக்<br />
<br />
நீ<br />
இப்போது<br />
பேசத்தொடங்கியிருக்கிறாய்<br />
அது<br />
உனக்கான மொழியாக ஒலிக்கிறது.<br />
<br />
எங்கள்<br />
பயிற்றுவிப்புகளுக்கு<br />
இப்போது<br />
உன்னிடம் அங்கீகாரமில்லை<br />
நீ<br />
நினைத்ததையே<br />
உன் குரலில் பதிவு செய்கிறாய்<br />
<br />
எல்லாவற்றுக்கும்<br />
புதிய சொற்களை<br />
பயன்படுத்தி சிரிக்கிறாய்<br />
எங்கள்<br />
விருப்பத்திற்கு<br />
மொழிபெயர்த்து<br />
மகிழ்ந்துக்கொள்கிறோம்.<br />
@<br />
<br />
சூரியன்<br />
மறைந்தும் மறையாத<br />
அடர்பகல் பொழுதின்<br />
மென்தூறல்<br />
இரசித்தல் அழகு<br />
எழுந்து<br />
நடைபயில தொடங்கியிருக்கும்<br />
குழந்தை<br />
உறங்கும் தருணங்களில்<br />
@<br />
<br />
உனக்கு<br />
ஊட்டுவதற்காக<br />
பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட<br />
உணவை<br />
உன்னைக்கடந்து செல்கிற<br />
கோழிக்கும்<br />
அமர்ந்து பறக்கும் காகத்திற்கும்<br />
அள்ளி இரைத்து விளையாடுகிறாய்<br />
அவற்றை<br />
விரட்டமுனையும்<br />
என்னைப்பார்த்து புன்னகைத்தபடி<br />
@<br />
<br />
தலையணையை<br />
பொம்மைக்கு வைத்துவிட்டு<br />
தரையில் தலைவைத்து<br />
உறங்கிவிடுகிற<br />
உன் காலத்தை<br />
அறியாப்பருவம் என<br />
அறிமுகப்படுத்தியுள்ளனர்<br />
என் முன்னோர்<br />
@<br />
<br />
எங்களுக்குப் பழக்கப்பட்டவற்றை<br />
உன்<br />
உலகத்துக்குள்<br />
திணிப்பதையே கடமையாக கருதுகிறோம்<br />
எங்கள் கவனத்துள்<br />
அகப்படாத அற்புதம்<br />
உன் உலகமென்பதை புறக்கணித்தபடி<br />
@<br />
<br />
சிறை பற்றியான<br />
புரிதல்களும்<br />
இலக்கணங்களும்<br />
அவரவர் உலகத்திற்கேற்ப மாறலாம்<br />
குழந்தைகளின்<br />
உலகத்தில்<br />
வீடு சிறையாகியிருக்கலாம்<br />
@<br />
<br />
நன்றி : கணையாழி நவம்பர் 2011<div class="blogger-post-footer">¾?¢?? ???? §????
¾?¢? ¾?? ???? §?÷</div>இ.இசாக்http://www.blogger.com/profile/14128058077624270987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13549418.post-59828152517096266872011-10-11T23:57:00.000-07:002011-10-11T23:57:00.241-07:00இசாக் மார்க்’ நிழற்குடை! -த.பழமலய்<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCYuSXYiZfSHlOM5ogbZgb4EgkrBsQOGVi6BI_0uGln1RV9g87NSB_wvb1amAjhZQVX3JEVhmUWvfdsPlaxkm_QeXyECvK2FX0hcxzChOD7x4Rq57J3hVzuEbTEIIVzWb4JLL_Rg/s1600/mau_niz_kud1.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"><img border="0" height="238" width="162" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCYuSXYiZfSHlOM5ogbZgb4EgkrBsQOGVi6BI_0uGln1RV9g87NSB_wvb1amAjhZQVX3JEVhmUWvfdsPlaxkm_QeXyECvK2FX0hcxzChOD7x4Rq57J3hVzuEbTEIIVzWb4JLL_Rg/s320/mau_niz_kud1.jpg" /></a></div><br />
<b>இசாக் மார்க்’ நிழற்குடை!</b><br />
<b>த.பழமலய்</b><br />
<br />
காதல் என்பது எதுவரை?<br />
கழுத்தில் தாலி விழும்வரை என்றார் கண்ணதாசன். காலம் மாறிக் கொண்டே இருக்கிறது.<br />
காதல் என்பது எதுவரை?<br />
<br />
கனவில் இன்னொருவர் வரும் வரை‡என்று சொல்லிவிடலாம். இன்றைக்கு ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ளும் சூழல் பலவாகிவருகிறது. தமயந்தி முன் நலன்கள் பலராக நிற்கிறார்கள்.<br />
<br />
அறிமுகம், பழக்கம், காதலாகி விடமுடியாது. தேர்தலில் பலர் நிற்கும்போது தேர்ந்தெடுப்பவர்கள் குழம்பித் தான் போகிறார்கள். தேர்தலையே புறக்கணிக்கின்ற அளவுக்கும் குழம்பிவிடுகிறார்கள்!<br />
<br />
கனவு காதலாகாது. கனவில் வருகிறவர்கள் யாவரும் காதலர்களாகிவிடமாட்டார்கள். இன்றைக்குக் கனவுக் கன்னியோ கனவுக் கனவுக்காளையோ ஒருவருக்கு ஒருவராக இல்லை. ஒரே நேரத்தில் பல இடங்களில் தோன்றுப்பவர்களாக இருக்கிறார்கள். <br />
திருவள்ளுவர் பெண்ணைத்தான் ‘ஆய் மயில்’ என்றார். அவள் ஆணை ஆராய்ந்து தேர்ந்தெடுக்க வேண்டியவளாக இருந்தாள். இன்று ஆணையும்‘ஆய்காளை’ என்று சொல்ல வேண்டியிருக்கிறது. அவனும் அவளை ஆராய்ந்து தேர்ந்தெடுக்க வேண்டியவனாக இருக்கிறான். அவ்வளவுக்குக் காதல் சந்தையில் கள்ளநோட்டுகளின் புழக்கம் அதிகரித்துவிட்டது! இதில், ஒன்பது ரூபாய் நோட்டு, கறுப்புப்பணம்...என்றெல்லாம் கூட இருக்கின்றன! <br />
<br />
செங்கல் அறுக்கிற மாதிரி செய்கிற காரியம் அல்ல காதல். ஆனால் இன்றைக்கு எதார்த்தத்திலும் சரி, இலக்கியத்திலும் சரி, அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. கன்னி, காளை, என்றால் காதல் செய்ய வேண்டும். கவிஞன், எழுத்தாளன் என்றால், காதலைப் பற்றி எழுத வேண்டும். <br />
<br />
காலந்தோறும் காதலைப்பற்றி எழுத வேண்டியது தான். எழுதுகிறவர்களின் சமூகக் கடமையும் அது. ஆனால் அது, பொழுது போக்காக இருக்கக் கூடாது, பொறுப்புள்ள வேலையாக இருக்க வேண்டும். கவிஞர் இசாக் பருவ வெயிலுக்கு நிழற்குடை தயாரித்திருக்கிறார். ‘இசாக் மார்க்’ நிழற்குடை! இது, காளான் குடை இல்லை என்பது பெரிய ஆறுதல்.<br />
<br />
தூரதேசம், முத்தங்களைத் தொலைபேசி முத்தங்களாக்கி விட்டன. பார்த்து இரசித்த வான ஊர்தி பகையாகத் தெரிகிறது. எண்ணெய் தேசத்தில் அவன் இருந்தால், இங்கே எரிபவளாக இவள் இருக்கிறாள்!<br />
<br />
காதல், கோலம் என்றால், அதற்கு ஒருவர் புள்ளி வைத்தால், இன்னொருவர் கோடு இழுக்க வேண்டும். ஒருவரே செய்வதற்குப் பெயர், காதல் அல்ல. அது வேறு அடிமை செய்தல் அல்லது ஆட்டிப் படைத்தல்.<br />
<br />
காதல் விட்டுக் கொடுப்பது அல்ல, சரிநிகர் சமானம் பாராட்டுவது. இதனால்தான், இசாக்கின் காதலன் அடீ என்றால், காதலி, அடெய் என்றால் சமத்துவம் சரிதான். என்றாலும் இது நில உடைமைச் சமுதாயத்தின் நிழல்படிந்த சொல்லாட்சி, அணுகுமுறை. நாம் விழைவது தோழமை. தனிமையிலும் சரி, பொது இடத்திலும் சரி, ஒருவர் சுயமரியாதையை பொது ஒருவர் பாதிக்கக் கூடாது. அவமரியாதை அனு மதிக்கப் படக்கூடாதது. பெயர் சொல்லலாம், அல்லது தோழரே என்று விளித்துப் பேசலாம்.<br />
உன் / பொய்க் கோபம் பற்றி / எனக்குத் தெரியாதா? / கிள்ளிய வானென்பதற்காக / மணம் / வீசவா மறுக்கும் மல்லிகை?” <br />
இது ஒரு இசாக் மார்க் கவிதை. இது பொருள் விரிவுக்கு உரியதாக இருப்பது இதன் சிறப்பு. மல்லிகை கிள்ளியவன் என்பதற்காக மணக்கவில்லை, கில்லியதைக் கீழே போடாமல், மேலே மூக்குக்குத் துக்குகிறான் என்பதற்காகவே அது மணம் வீசுகிறது! அலட்சியப்படுவது அல்ல, அழகுப் பார்ப்பது காதல்!<br />
<br />
கன்னக்குழி, பதுங்கு குழியாக இருக்கலாம். புதைகுழி ஆகிவிடக்கூடாது. முரண்படுவது, வில்லினை/ வில்லியை விரும்புவது மெய்யாக இருந்துவிடக் கூடாது. அவன் பணம் பூக்கிற செடியாக, அவள் குழந்தை காய்க்கிற மரமாக இல்லாமல், மனிதர்களாக வாழவேண்டும். <br />
<br />
இசாக், தன் கவிமனத்தால், காதல் கவிதைகளால், வெறும் காற்றைத் தென்றல் ஆக்குகிறார். அவர் கபடி விளையாடினால், அவர் காதலிக்கு மட்டும் அல்ல, நமக்கும் மூச்சு வாங்குகிறது. அவர் கவிதை நம்மை அப்படி ஆக்கிவிடுகிறது. காதலில் மூழ்குவது வாழ என்பது போல, அவர் கவிதைகளில் மூழ்குவது மகிழ என்பதாக, மனிதர்கள் ஆக என்பதாக இருக்கிறது.<br />
<br />
ஒருவருக்குள் ஒருவரை ஒளித்து வைத்துக் காப்பது காதல், ஒருவரை ஒருவர் செதுக்கிச் சிலையாக்குவது காதல், மரணமல்ல உயிர்த் தெழுதல் காதல், கவிதையின் கடைசிவரி காதல்...என்றெல்லாம் மகிமைப் படுத்தப்படும் காதல், நவீன ஓவியம் போல ஒவ்வொரு முறையும் வெவ்வேறு பொருளை உணர்த்துவது என்றும் உணர்ந்து, உணர்த்துகிறார் இசாக்.<br />
கவிஞருக்குக் கொலுசு பேசவில்லை, கால் பேசவில்லை, கொலுசு அணிந்த கால் பேசுகிறது. பேசும்! கவிதை பேசத் தெரியும் கவிஞருக்கு அவள் செருப்பு அணிந்த கால் பேசுவதையும் பேசத் தெரிய வேண்டும். அப்போது கவிஞருடைய நடை, ஒரு பாய்ச்சலாக இருக்கும்! நடையும் ஓட்டமும் போலக் கவிதைக்குப் பாய்ச்சலும் வேண்டும்.<br />
சாலையின் /ஒரு பகுதியில் நீ/ மறு பகுதியில் நான்/ ஊர்திகளின் நெரிசலில் சிக்கி /பாலம்/ இந்தக் காதல் <br />
இதில் விதி ஒன்று என்றால், விதி விலக்கு என்பது. காதலின் ஆதியும் அந்தமும் இதுதான். பாவப்பட்ட இந்தக் காதலைக் காப்பாற்றத்தான் தமிழில் காதல் கவிதைகள் தேவை, அகப்பாடல்கள் தேவை. இசாக் தன் பங்குக்குக் காப்பாற்றி உள்ளார்.<div class="blogger-post-footer">¾?¢?? ???? §????
¾?¢? ¾?? ???? §?÷</div>இ.இசாக்http://www.blogger.com/profile/14128058077624270987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13549418.post-14893767310857309212011-05-09T22:31:00.001-07:002011-10-11T03:47:44.598-07:00குருதிநெடி<span style="font-weight:bold;">குருதிநெடி</span><br />
<br />
<br />
செவிவழிச்செய்திகள்<br />
அலைபேசி அலறல்கள்<br />
புகைப்பட ஆதாரங்கள்<br />
அச்சிட்ட நூல்கள்<br />
காணொளிப் பதிவுகள்<br />
தொலைக்காட்சித் தொகுப்புகள்<br />
மொழிப்பெயர்ப்புப் பதிப்புகள்<br />
எல்லாம் குருதிநெடி குறையாமல்<br />
எங்கள் முன் இருந்தன<br />
நேற்று.<br />
<br />
<br />
எல்லாமும்<br />
எங்களின் முன்<br />
நிகழ்ந்து முடிந்தன<br />
முந்தினநாள்.<br />
<br />
அழவும்<br />
ஆதாரங்கள் தேவை என்றோம். <br />
<br />
ஆதாரத்தேடலில்<br />
ஆத்மசோகம்<br />
அழிந்துப்போயின.<br />
<br />
எங்கள் வலிகளும்<br />
பலமானவன் சொன்னால்தான்<br />
உணரமுடியும் என்றாகிவிட்டன இப்போது.<br />
<br />
காகிதங்களைப்<br />
புரட்டிக்கொண்டு<br />
கருத்துச்சொல்ல முனைகின்றோம்<br />
மனிதம் செத்துப்போயிருந்தது.<br />
<br />
சாவுகளுக்கு அழலாம்<br />
காவுகளுக்கு?<br />
<br />
நன்றி : தாமரை<div class="blogger-post-footer">¾?¢?? ???? §????
¾?¢? ¾?? ???? §?÷</div>இ.இசாக்http://www.blogger.com/profile/14128058077624270987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13549418.post-74786324237458497092011-03-14T05:33:00.000-07:002011-10-11T03:48:47.321-07:00மானமிழத்தல்<span style="font-weight:bold;">மானமிழத்தல்</span><br />
<br />
<br />
எல்லோரின்<br />
பேச்சுகளும், வசவுகளும்<br />
அழுகைகளும், விம்மல்களும்<br />
முனகல்களும், உளரல்களும்<br />
என் சுவற்றில்பட்டு<br />
எதிரொலித்துக்கொண்டிருதமையால்<br />
அமைதியற்றே<br />
காட்சியளித்திருக்கின்றன<br />
என்<br />
இருப்புகள்.<br />
<br />
இவற்றுக்காய்<br />
சண்டியிடுவதோ<br />
நட்புகளைத்துண்டித்துத்<br />
தனித்திருப்பதோ<br />
அநாகரிகமென<br />
சகித்திருத்தலில்<br />
வளரத்தொடங்கியதென்<br />
பெருந்தன்மை.<br />
<br />
நேற்று<br />
என் முகத்தில்<br />
உமிழப்பட்ட<br />
எச்சில்களுக்கும்<br />
எதிர்ப்புக்காட்டவோ<br />
ஆத்திரப்படவோ<br />
முயற்சிக்காமல்<br />
கடந்துப்போகிறதென் காலம்.<br />
<br />
ஆம்<br />
மானமிழத்தலின்<br />
மறுப்பெயர்<br />
நாகரிகம்.<br />
<br />
நன்றி : தாமரை<div class="blogger-post-footer">¾?¢?? ???? §????
¾?¢? ¾?? ???? §?÷</div>இ.இசாக்http://www.blogger.com/profile/14128058077624270987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13549418.post-68821153099970579772011-03-14T05:29:00.000-07:002011-03-14T05:32:50.572-07:00ஒரு மனநோயாளியின் கலைவடிவம்<span style="font-weight:bold;">ஒரு மனநோயாளியின் கலைவடிவம்</span><br /><br />ஒவ்வொரு கலை வடிவமும் மக்களைப் பண்படுத்துவதாகவே இருக்க வேண்டும். அதுவே அந்தப் படைப்புக்குப் பெருமை தரும். ஒடுக்கப்படுகிற, வஞ்சிக்கப்படுகிற மக்களின் வலிகளைக் கருவாக்கி வெளியாகும் கலைவடிவங்கள் காலம் கடந்து நிற்கும்.<br /><br />கலைஞன் எனப்படுபவன் மண்ணின் மக்களின் வலி சுமந்தவனாக இருக்கவேண்டும். அவனால் மட்டுமே அம்மக்களுக்கான படைப்பைக் கொடுக்க முடியும். தொழிற்நுட்பம் என்றும் கலையம்சம் என்றும் பினாத்திக்கொண்டு திரியும் கலைவியாபாரிகளால், எள்ளளவும் மக்களுக்கான படைப்பைத்தர முடியாது.<br /><br />மக்களின் வாழ்வியல் சார்ந்த அல்லது நடைமுறை வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாக கூறிக்கொண்டு தனது வக்கிரத்தையும், மன விகாரங்களையும் காட்சிப்படுத்துவதை கலையின் வடிவமாகப் பார்க்க முடியாது. சமூகம் அதை அனுமதிக்கவும் கூடாது.<br /><br />நடுநிசி நாய்கள் என்னும் நாற்றமெடுத்த குப்பையை தமிழ் நாட்டு திரைரசிகர்கள் தலையில் கொட்டியிருக்கும் கௌதம் வாசுதேவ் மேனன், சென்ற தனது படைப்புகளில் தமிழ்ப்பெயர் தாங்கிய பாத்திரங்களை ஒழுங்கீனர்களாக சித்தரித்த, தமிழர் விரோத சிந்தனையைத் தனது மூலைக்குள் ஒளித்துவைத்துக் கொண்டுள்ள திரைவியாபாரி என்பது பழைய செய்தி. மக்கள் விரோத சிந்தனையே இந்த அரைவேக்காட்டு கலைஞனின் மூலதனம் என்பது சமீபத்திய உண்மை.<br /><br />ஆம், நடுநிசி நாய்கள் என்னும் படத்தின் கதை?<br /><br />சமர் என்னும் ஒரு சிறுவன் 13 வயதாகும் பொழுது ஏற்கெனவே தாயை இழந்தவனுக்கு தந்தையின் போதைப்பழக்கமும், தவறான உறவுகளும் அறிமுகப் படுத்தப்படுகின்றன. அவனைக் காப்பாற்ற வரும் பக்கத்து வீட்டுப் பெண் மீனாட்சி மூலம் காவல்துறைக்கு தகவல் கிடைக்க தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்து போகின்றார் அவன் தந்தை.<br /><br />அதன் பின் சமர் என்னும் வீராவைத் தன் பொறுப்பில் வளர்க்கும் மீனாட்சியிடம் 5 வருடங்கள் நல்ல பிள்ளையாக இருக்கும் வீரா, அதன் பின் அவனைத் துரத்தும் பழைய எண்ணங்கள், கனவுகளால் அவளை நிர்ப்பந்தித்து உறவு கொள்கிறான். அவனை தன்னிடமிருந்து விலகும்படி சொல்லும் மீனாட்சி, தன் பழைய நண்பரொருவரைத் திருமணம் செய்கிறாள். முதலிரவின்பொழுது அந்த கணவனைக் கொன்று விட்டு, மீனாட்சியை தன்னுடன் வரும்படி கேட்கிறான் வீரா.<br /><br />அந்த இரவில் படுக்கையறை தீப்பிடித்து எரிய, இறந்து விடுகிறாள் மீனாட்சி. நிஜத்தில். ஆனால் வீராவைப் பொறுத்தவரை அவள் கோர உருவத்துடன் அவனை மன்னித்து அவனுடன் சென்னை வந்து ஆளற்ற பண்ணை வீட்டில் வசிக்கிறாள்.<br /><br />தனக்கு அறிமுகமாகும் பெண்களை மீனாட்சிக்காக கொல்வதாக நினைத்து கொன்று விடும் வீரா, கடைசியாக தன்னுடன் படித்த பள்ளி தோழி சமீராவை அவளது காதலனுடன் சினிமா பார்க்கும் போது அவனைக் கொன்று அவளை கடத்தி வருவதும், அவனது மனம் பிறழ்ந்த அட்டகாசங்களுக்கும், அடுத்தடுத்த பல கொலைகளுக்குப் பின் ஒரே ஒரு காவலதிகாரியால் சமீரா கடைசியில் மீட்கப்பட, சமர் என்னும் வீரா மன நோயாளி என்று ஒரு மருத்துவர் அதற்கான காரணம் குழந்தைகளின் மீதான பாலியல் வன்முறை என படத்தை முடித்து, தான் ஒரு மனநோயாளி என்பதை இரசிகனுக்கு உணர்த்துகிறார் கௌதம் வாசுதேவ் மேனன்.<br /><br />எதைச் சொல்ல வருகிறோம் என்ற நேர்மையற்ற ஒர் அற்பப்படைப்பு. எல்லாமுமே எதிர்மறையான பாத்திரங்கள். மேலோட்டமான கதை சொல்லல். சம்பவங்கள் எதிலும் நம்பிக்கை வராத அளவுக்கு அபத்தங்களின் தொகுப்பாக வடிவமைக்கப்பட்ட காட்சிகள். இப்படி நடுநிசி நாய்கள் படக்காட்சிகள் அனைத்தும் தெருநாய்களைப்போல ஒழுங்கற்றுக்கிடந்தாலும் அப்படத்தின் கருதான் நம்மை அதிர்வூட்டுகின்றன.<br /><br />ஏற்கெனவே படம் பார்த்து விட்டுக் கொலை செய்த வரலாறு.. கொள்ளை ஆட்கடத்தல் போன்றவற்றைப் பாடம் படிப்பது போல சினிமாவைப் பார்த்து முயற்சித்த வரலாறு இதே தமிழ்நாட்டில் உண்டு. நடுநிசி நாய்கள் - மனிதர்களை மனநோயாளிகளாக்கி அலையவிடும்.<br /><br />குழப்பங்களின் குவியலான இந்த ..........மேனன், சமீபத்தில் தமிழ்மக்கள் மீது நடத்திய உளவியல் சமர் தான் நடுநிசி நாய்கள். இந்த நாயின் நாயகன் பெயரும் சமர். என்ன கொடுமை சேட்டா?<br /><br />கதாநாயகியின் தொப்புளில் கைப் படுவதே ஆபாசம் என்று வரையறை சொல்லும் சென்சார் அல்லது ராமேஸ்வரக் கரையில் கொடிய துன்பங்களை அனுபவிக்கும் அகதிகளின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட காட்சிக்கு அனுமதி மறுக்கும் தணிக்கைக்குழு, ஏழைவிவசாயக்கூலிகளின் வலியைப்பேச தடைவிதிக்கும் தணிக்கைக்குழு, உயிர்நேயத்தை, மனிதநேயத்தைப் பேசும் உணர்வுள்ள தமிழ் இயக்குநர்களின் படைப்புகளுக்கு தடைசொல்லும் தணிக்கைக்குழு, இந்த படத்தில் மேனன் வைத்துள்ள வக்கிரக் காட்சிகளில் தூங்கிக் கொண்டிருந்ததா?<br /><br />இவ்வளவு கொடுமைக்கிடையிலும், நமக்குள்ள அச்சமெல்லாம் சமீபத்தில் இயக்குநர்கள் சங்க விழாவில் பாரதிராஜா, இந்த மேனன் பற்றி பேசியதை நினைத்து தான். அதிகார மையமும், அமைப்பும் இப்படிப்பட்ட கேடுகெட்ட படைப்பாளியை கொண்டாடுகின்றன. இது எங்கு போய் முடியுமோ?<br /><br />எந்தப் பெயரில் இயங்க வேண்டும் என்ற தெளிவற்ற மனநோயாளியான .......மேனன் செம்மொழியான தமிழ் என்று தொடங்கும் பாடலை தமிழ்ப்பண்பாட்டுக்கு தொடர்பற்ற அபத்தக்குவியலாக்க் காட்சிப்படுத்தி தமிழார்வலர்களின் வயிற்றில் நெருப்பள்ளிக்கொட்டி மகிழ்ந்ததும், இதை முத்தமிழறிஞர் கண்டு இரசித்ததும் வரலாறு. <br /><br />தமிழ்மக்களின் வாழ்வையும், தமிழ் மண்ணின் சூழலையும் உணர்ந்த படைப்பாளிகள் திரையுலகுக்குள் ஆளுமை செலுத்தத் தொடங்கியிருக்கும் இன்றைய சூழலில், அம்புலிமாமா அட்டுக்கதைகளை உலகத்தரம் என்று கதைவிட்டு ஊரை ஏமாற்றும் ஷங்கர்களும், தமிழ் மக்கள் விரோத கருத்தை மட்டுமே மண்டைக்குள் வைத்து திரியும் மேனன்களும் கொண்டாடப்படுவது நல்லதல்ல. மேனன் போன்ற கேடுகெட்ட கலைஞர்களின் வளர்ச்சி தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல, தமிழ்த்திரையுலகுக்கே கேடு.<br /><br />திரைக்குவந்துவிட்ட நடுநிசி நாய்களிடம் இருந்து தமிழர்கள் தன்னை எப்படியாவது பாதுகாத்துக்கொள்வார்கள். அந்த .....மேனன்களின் மூலைக்குள்ளிருக்கும் நாய்களிடமிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டியது திரையுலகில் உள்ள உணர்வாளர்களின் கடமை ஆகும்.<br /><br /> <br />நன்றி: தமிழ் முழக்கம் வெல்லும் (மார்ச் 1-15)<div class="blogger-post-footer">¾?¢?? ???? §????
¾?¢? ¾?? ???? §?÷</div>இ.இசாக்http://www.blogger.com/profile/14128058077624270987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13549418.post-15453559542853757632010-11-12T05:12:00.000-08:002010-11-12T05:14:45.390-08:00உங்களால் முடியும்அழித்தொழிப்பின்<br />வன்கொடுந்துயர்தாளாமல்<br />தீர்ந்துப்போகாத<br />நெடுந்தாகத்துடன்<br />துடித்தழுதுக்கொண்டிருப்பவனின்<br />தோள் தட்டி<br />முந்தைய தவறுகளின்<br />பட்டியல் நீட்டி<br />திறனாய்வுகளையும் ஆலோசனைகளையும்<br />அவன்<br />சோகம் ததும்பும் முகத்தில்<br />அள்ளி அள்ளித்<br />தெளிக்கமுடியும் உங்களால்.<br /><br />ஏனெனில்<br />நீங்கள்<br />அறிவுஜீவிகள்!<div class="blogger-post-footer">¾?¢?? ???? §????
¾?¢? ¾?? ???? §?÷</div>இ.இசாக்http://www.blogger.com/profile/14128058077624270987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13549418.post-43614628922648424842010-07-06T09:51:00.000-07:002010-07-06T09:52:03.606-07:00பெரிதில்லைபெரிதில்லை<br /><br />இராட்சச கொசுக்களை <br />அலுவலகத்திலும் <br />வழிகளிலும் <br />தினசரி <br />சந்தித்து பழகிவிட்டதால் <br /><br />என் <br />குருதி குடித்து <br />இரவுத்தூக்கத்தை தின்னும் <br />கொசுக்கள் பற்றி <br />நான் <br />கவலைப்படுவதில்லை.<div class="blogger-post-footer">¾?¢?? ???? §????
¾?¢? ¾?? ???? §?÷</div>இ.இசாக்http://www.blogger.com/profile/14128058077624270987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13549418.post-46859283313713557542010-07-06T09:50:00.000-07:002010-07-06T09:51:00.427-07:00மிரட்டல்மிரட்டல்<br /><br />என்னை <br />அச்சமூட்டுவதற்கென <br />சிலரை <br />காலம் <br />உருவாக்கிவிட்டிருக்கிறது <br /><br />முன்பெல்லாம் <br />பள்ளி ஆசிரியர் <br />பணியிட முதலாளி <br />என பலருண்டு. <br /><br />இப்போது <br />வாடகை வீட்டு உரிமையாளர்.<div class="blogger-post-footer">¾?¢?? ???? §????
¾?¢? ¾?? ???? §?÷</div>இ.இசாக்http://www.blogger.com/profile/14128058077624270987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13549418.post-47642051641140186392010-07-06T09:49:00.000-07:002010-07-06T09:50:03.171-07:00சொறிதல் திணைசொறிதல் திணை<br /><br />நாங்கள் <br />சூழலையும் சுற்றத்தையும் <br />அடிப்படையாக கொண்டு <br />ஐந்து திணைகளாக <br />பிரிந்து <br />வாழ்ந்திருந்தோம் <br /><br />ஆட்சியாளர்கள் <br />ஒரே திணையில் <br />இணைத்தார்கள் <br />ஆம் <br />சொறித்தல் திணை<div class="blogger-post-footer">¾?¢?? ???? §????
¾?¢? ¾?? ???? §?÷</div>இ.இசாக்http://www.blogger.com/profile/14128058077624270987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13549418.post-53917910926335280062010-07-04T05:45:00.000-07:002010-07-04T05:46:11.831-07:00சந்திப்புஞெகிழி குவளையில்<br />சூடான தேனீரை நிரப்பியபடி <br />தொடங்குகிறாய்<br />உன்<br />குளிர்ச்சியான பேச்சை.<br /><br />தீதொன்றும் அறியாத<br />எனக்கு<br />நச்சுத்தெரிக்கும் சொற்கள்<br />அடையாளப்படாமலே<br />காற்றில் கலந்தழிகின்றன.<br /><br />என்னை கடந்துவிட்ட<br />சூழ்ச்சிகளை<br />தேடும் முயற்சியில்<br />புதிய தாக்குதல்களுக்கும்<br />எதிர்வினையாற்ற<br />இயலாதவனாகி நிலைகுளைகிறேன்.<br /><br />பழையன மறந்து<br />ஆயத்தமாகவே உள்ளேன்<br />இனி<br />உன் தாக்குதல்<br />எத்திசையிலிருந்து வந்தாலும்<br />சந்திப்பேன்.<div class="blogger-post-footer">¾?¢?? ???? §????
¾?¢? ¾?? ???? §?÷</div>இ.இசாக்http://www.blogger.com/profile/14128058077624270987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13549418.post-16973878635729949332010-06-21T23:41:00.000-07:002010-06-22T00:08:08.369-07:00அவளுக்கு அவள் என்று பெயர்<strong>அவளுக்கு அவள் என்று பெயர்</strong><br /><br />அவளின் <br />இளமைத்தமிழால் <br />காதல்<br />கவிதைகள் கிளைக்கும்.<br /><br />அவளின்<br />ஈரப்பார்வையில்<br />காமப்<br />பயிர்கள் முளைக்கும்.<br /><br />அவள்<br />இதழ்களின் பிரிவில்<br />சங்கத்<br />தமிழ் வந்து சிரிக்கும்.<br /><br />அவள்<br />இடைவெளி சரிவினில்<br />சகாரா<br />பாலையும் சிலிர்க்கும்.<br /><br />அவள்<br />பருவத்திமிரில்<br />உயிர்<br />விளைச்சல் பெருகும்.<br /><br />அவளின்<br />புருவத்தேனால்<br />உடல்<br />களைத்தல் அருகும்.<div class="blogger-post-footer">¾?¢?? ???? §????
¾?¢? ¾?? ???? §?÷</div>இ.இசாக்http://www.blogger.com/profile/14128058077624270987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13549418.post-34681244608626366062010-06-05T08:12:00.000-07:002016-04-02T01:06:59.425-07:00வாழ்நாள் கனவு...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEghbzPE7mG4RgBtQSWBBf-lvWweDUPWGHu470rlj6BSBfKhHWTIScCSu61ud7XtR0aGdnr7PNqe1GEf1iqdQGC9LCCOcM50I8d9BcpDOQX5XefVJLkWmMCuGZaoSPKHDZe73q27Ig/s1600/thunai_IshaqSM1.jpg"><img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5479308458204343762" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEghbzPE7mG4RgBtQSWBBf-lvWweDUPWGHu470rlj6BSBfKhHWTIScCSu61ud7XtR0aGdnr7PNqe1GEf1iqdQGC9LCCOcM50I8d9BcpDOQX5XefVJLkWmMCuGZaoSPKHDZe73q27Ig/s320/thunai_IshaqSM1.jpg" style="cursor: hand; cursor: pointer; display: block; height: 320px; margin: 0px auto 10px; text-align: center; width: 206px;" /></a><br />
<br />
<br />
தினமணி நாளிதழில்<br />
<br />
இந்த வாரம் கலாரசிகன்<br />
******************************<br />
<br />
கடந்த மூன்று மாதமாக எனது மேஜையில் இருக்கிறது இந்தப் புத்தகம். ஒவ்வொரு வாரமும் எழுத வேண்டும் என்று நினைப்பேன். எழுதப் புகுமுன் அது எங்கோ புத்தகக் குவியலில் ஓடி ஒளிந்து கொண்டுவிடும். இந்த வாரம் மறக்காமல் அந்தப் புத்தகத்தைத் தேடி எடுத்து வைத்துக் கொண்ட பிறகுதான் எழுதவே தொடங்கினேன்.<br />
<br />
அது என்ன புத்தகம் என்றா கேட்கிறீர்கள்? ஒரு கவிதைத் தொகுப்பு. எழுதியவர் பெயர் இசாக். இவரொன்றும் எழுத்துலகத்துக்கும், கவிதைக்கும் புதியவரல்ல. கடல் கடந்து ரசிக்கப்படும் படைப்புகளுக்குச் சொந்தக்காரர். யதார்த்தமான சிந்தனைகளை சிக்கலே இல்லாமல் சர்வ சாதாரணமாகக் கையாளும் தன்னுணர்வுக் கவிஞர். இவரது கவிதைத் தொகுப்பின் பெயர், "துணையிழந்தவளின் துயரம்'.<br />
<br />
பொருள்தேட வேண்டி குடும்பத்தைப் பிரிந்து வளைகுடா நாடுகளில் இரவு பகல் பாராமல் உழைக்கும் மனித மனங்களின் சோகச் சித்திரத்தை வார்த்தை வடிவமாக்கி இருக்கிறார் கவிஞர் இசாக். இந்தத் தொகுப்பில் வெளியாகி இருக்கும் கவிதைகளில் சில, பல முன்னணி இதழ்களில் பிரசுரமானவைதான் என்றாலும், ஒரு தொகுப்பாகப் படிக்கும்போது அதன் வீச்சும், தாக்கமும் அலாதிதானே!<br />
<br />
இசாக்கின் கவிதைகளில் பாலைத் திணையின், "பிரிதலும் பிரிதல் நிமித்தமும்' தற்காலத் தன்மையுடன் பேசப்படுகின்றன என்கிற இந்திரனின் கருத்து மிகமிக உண்மை.<br />
<br />
<strong>வாழ்க்கையில்<br /><br />விடுமுறை நாட்கள்<br /><br />வரும் போகும்<br /><br />அனைவருக்கும்...<br /><br />விடுமுறை நாட்களில்தான்<br /><br />வந்து போகிறது<br /><br />வாழ்க்கை<br /><br />நமக்கு!</strong><br />
******************************<br />
<br />
<strong>துபாய்!<br /><br />வெளியில் இருப்பவனுக்கு<br /><br />வாழ்நாள் கனவு...<br /><br />உள்ளே இருப்பவனுக்கு<br /><br />வாழ்நாளே<br /><br />கனவு!</strong></div>
<div class="blogger-post-footer">¾?¢?? ???? §????
¾?¢? ¾?? ???? §?÷</div>இ.இசாக்http://www.blogger.com/profile/14128058077624270987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13549418.post-54417234663229611372010-02-17T03:40:00.001-08:002010-02-17T03:42:14.895-08:00'துணையிழந்தவளின் துயரம்' கவிதை நூலின் வெளியீட்டு விழா<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgqWcWyVNwvkb-5nprZ5vUwI2ndSeQxDpgEu43aNwk3JFFYVdMJVfpnv62A0fcXuHJCpHMl-_mN1IfbZ-ZWEdJrOs0nWu-lwWTjlOBw6tKHEkcxB2TrDkakF3g5CXKgzWXVfaVkXg/s1600-h/Azaippu.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 94px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgqWcWyVNwvkb-5nprZ5vUwI2ndSeQxDpgEu43aNwk3JFFYVdMJVfpnv62A0fcXuHJCpHMl-_mN1IfbZ-ZWEdJrOs0nWu-lwWTjlOBw6tKHEkcxB2TrDkakF3g5CXKgzWXVfaVkXg/s320/Azaippu.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5439176307072419842" /></a><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi3gu9qF0DR1qt8C5HrQWiCatiObqxuM7tVufy5iYU9kZ6h3RdTyK1atQ3Xe3QLPp6jeiQAUVFIzxCJGS6HpXz1ZYlZblrtnE0hbwnqckNlru1XFqJyk6NjaNGAOSqh2_81EgMKcA/s1600-h/Azaippu_inner.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 94px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi3gu9qF0DR1qt8C5HrQWiCatiObqxuM7tVufy5iYU9kZ6h3RdTyK1atQ3Xe3QLPp6jeiQAUVFIzxCJGS6HpXz1ZYlZblrtnE0hbwnqckNlru1XFqJyk6NjaNGAOSqh2_81EgMKcA/s320/Azaippu_inner.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5439176148145103138" /></a><br />என்னுடைய<br />'துணையிழந்தவளின் துயரம்' கவிதை நூலின் வெளியீட்டு விழா<br /><br />வருகிற பிப்ரவரி 28 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை, மாலை 5.30 மணியளவில்<br />சென்னை தியாகராயர் நகர், 51. ஜி. என். செட்டி சாலை (பாரதிராசா மருத்துவமனை எதிரில்)<br />ஹோட்டல் பெனின்சுலா நிகழ்ச்சி அரங்கில்<br /><br />கவிஞர் அறிவுமதி அவர்கள் தலைமையேற்கவும்<br />திரு அ.சாதிக் பாட்சா அவர்கள் வரவேற்புரை ஆற்றவும்<br /><br />கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் நூலை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கவும்<br />மதுரா பாலன்,<br />கவிஞர் சேதுகுமணன்<br />ஆகியோர் நூலைப் பெற்று வாழ்த்தவும்<br /><br />திரு தமிழ்முழக்கம் சாகுல் அமீது<br />திரு இனியவன் ஹாஜி,<br />திரு மின்வெளி தனபால்<br />திரு கீற்று இரமேஷ் ஆகியோர் சிறப்புப்பிரதிகளை பெறவும்<br /><br />கவிஞர் பழநிபாரதி,<br />இயக்குநர் மீராகதிரவன்,<br />திருமதி நங்கை குமணராசன்<br />திரு வன்னிஅரசு,<br />ஆகியோர் கருத்துரை வழங்கவும்<br /><br />ஒப்புதல் அளித்துள்ளார்கள்...<br />நீங்களும் அவசியம் இந்நிகழ்வில் பங்கேற்று சிறப்பிப்பீர்கள் என நம்புகிறேன்.<br /><br />தங்கள் வருகையில் மகிழும்<br />இசாக் மற்றும் உறவும் நட்பும்<div class="blogger-post-footer">¾?¢?? ???? §????
¾?¢? ¾?? ???? §?÷</div>இ.இசாக்http://www.blogger.com/profile/14128058077624270987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13549418.post-83446071101529850382009-12-25T19:17:00.000-08:002009-12-25T19:18:09.307-08:00பொதுபொது<br /><br />எல்லோருக்கும்<br />எல்லாவற்றுக்கும் போதுவனவனாக<br />வாழவேண்டுமென<br />முயற்சித்தேன்<br /><br />நானே<br />இல்லாமல் போனேன்<div class="blogger-post-footer">¾?¢?? ???? §????
¾?¢? ¾?? ???? §?÷</div>இ.இசாக்http://www.blogger.com/profile/14128058077624270987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13549418.post-23101808604334883432009-12-25T19:10:00.000-08:002009-12-25T19:12:26.827-08:00அறிதல்அறிதல்<br /><br />தண்ணிரில் <br />மீன் அழுதால் <br />யார் அறிவார் என்பார்கள்<br /><br />இராமேசுவரம் <br />மீனவர்கள்<br />அழுவதும் தெரிவதில்லை<br />எவருக்கும்.<div class="blogger-post-footer">¾?¢?? ???? §????
¾?¢? ¾?? ???? §?÷</div>இ.இசாக்http://www.blogger.com/profile/14128058077624270987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13549418.post-64635070573726043572009-12-19T21:00:00.000-08:002009-12-19T21:01:05.496-08:00வருகைவருகை<br /><br />பழுத்துதிரும் <br />சருகாகி <br />நிர்மூலமானவனாக <br />வாழநேர்ந்த போது <br /><br />விரும்பிய <br />தனித்திருத்தலுக்கான காலம் <br />கனிந்து வந்தது<div class="blogger-post-footer">¾?¢?? ???? §????
¾?¢? ¾?? ???? §?÷</div>இ.இசாக்http://www.blogger.com/profile/14128058077624270987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13549418.post-74744098006170850672009-12-19T20:55:00.000-08:002009-12-19T20:56:39.620-08:00இருத்தல்பதுங்கியிருந்து <br />வழக்கம் போல இன்றும் <br />வந்தது <br />சூரியன் <br /><br />பக்கத்து வீட்டின் <br />காப்பாற்றக் <br />கோரும் <br />பரிதாபக் குரலுக்கிடையே <br />நிலா இரசித்து <br />உறங்கி <br />எழுந்து <br />நாகரிகத்தின் உச்சமாக <br />''குட் மார்னிங்'' <br />சொல்லிக்கொண்டோம் <br />கூச்சமின்றி.<div class="blogger-post-footer">¾?¢?? ???? §????
¾?¢? ¾?? ???? §?÷</div>இ.இசாக்http://www.blogger.com/profile/14128058077624270987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13549418.post-74131016778331761952009-12-07T22:27:00.000-08:002016-04-02T01:07:29.419-07:00இசாக்கின் புதிய கவிதை தொகுப்பு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhc7KWQ76gQ7K3dEQGSixf16Y3I_EIwfA3wKr46tX5hWgZgn6ntFGh2tCUjhqAt05TQa72nRUvz2_47-Pd99WE4TkD4LwIBdyfynpnwx17BL_jCSx8SqF-YnRODTwPBCJ_TqVy8PQ/s1600-h/thunai_IshaqSM1.jpg"><img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5412749400264711810" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhc7KWQ76gQ7K3dEQGSixf16Y3I_EIwfA3wKr46tX5hWgZgn6ntFGh2tCUjhqAt05TQa72nRUvz2_47-Pd99WE4TkD4LwIBdyfynpnwx17BL_jCSx8SqF-YnRODTwPBCJ_TqVy8PQ/s320/thunai_IshaqSM1.jpg" style="cursor: hand; cursor: pointer; display: block; height: 242px; margin: 0px auto 10px; text-align: center; width: 320px;" /></a><br />
<br />
<strong>இசாக்</strong> கின் புதிய கவிதை தொகுப்பு <br />
<strong>துணையிழந்தவளின் துயரம்</strong><br />
கவிஞர் <strong>இன்குலாப்</strong>, கவிஞர் <strong>இந்திரன்</strong> ஆகியோர் முன்மொழிவுகளுடன்</div>
<div class="blogger-post-footer">¾?¢?? ???? §????
¾?¢? ¾?? ???? §?÷</div>இ.இசாக்http://www.blogger.com/profile/14128058077624270987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13549418.post-81718075160743555912009-11-23T02:14:00.000-08:002009-11-23T02:15:21.238-08:00ஒரு குடியின் பயனம்!ஒரு குடியின் பயனம்!<br /><br />- கிராபியென் ப்ளாக்<br /><br />""குடிப்பவனுக்கும், குடிகாரனுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை அறிந்து கொள்வது அவசியமானது'' என்று தனது கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார் எழுத்தாளர் நாஞ்சில் நாடன். இன்றைய சமூகத்தில் அவ்வாறு குடியை வேறுபடுத்திப் பார்க்க வேண்டிய சூழல் அவசியமாய்த்தான் இருக்கிறது. காரணம் குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துப் போயிருப்பதுதான். சாட்சி!<br /><br /><br />அரசே மதுக்கடைகளை எடுத்து நடத்துவது! ""தேவைப்படும் சமயத்தில் மட்டும் அளவறிந்து குடிப்பவனை குடிப் பழக்கம் உள்ளவன் என்றும்; எந்நேரமும் குடியில் மூழ்கியிருப்பவனைத்தான் குடிகாரன் என்று குறிப்பிட வேண்டும்'' என்றும் அவர் குறிப்பிடுகிறார். எதுவாயினும் குடிப் பழக்கம் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியதே. ஆனாலும் பெரும் தீமைகள் குடிப் பழக்கம் உள்ளவர்களால் ஏற்படுவதில்லை. பெரும்பாலும் குடிகாரர்களால்தான்!<br /><br /><br />சந்திப்பு:<br /><br /><br />அன்றைய மாலை வேளையில் வானம் மிகுந்த மேக மூட்டத்துடன் காணப்பட்டது. வீட்டிலிருந்து புறப்படும் போது ஏறக்குறைய இருட்டத் தொடங்கி, தூறல்கள் விழ ஆரம்பித்து விட்டாலும், எச்சரிக்கையுணர்வுடன் வெளியே கிளம்பியதால் கையில் குடை இருந்தது. தெருவில் இறங்கி நடக்கத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே பெருமழை பிடித்துக் கொள்ள, அடர்ந்து பெய்யும் மழையை ரசித்த படி, இசாக்கின் வீடு நோக்கிச் சற்று நடந்து சென்று கொண்டிருந்தோம். சென்னை, சைதாப்பேட்டை -ஆலந்தூர் சாலையை ஒட்டியுள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் நமக்காக காத்திருந்தார் கவிஞரும், குறும்பட இயக்குனருமான இசாக். மழையோடு நம்மை வரவேற்றவர் அவரது நிறுவனமான தமிழ் அலை ஊடக உலகத்திற்கு அழைத்துச் சென்றார். வழக்கமான இலக்கிய உரையாடல்களுக்குப் பிறகு, அவரது நீண்ட கணினித் திரையில் நண்பர்களோடு "ஒரு குடியின் பயணம்' குறும்படத்தை பார்க்கத் தொடங்கினோம்.<br /><br /><br />கதை:<br /><br /><br />இதுவென்று அறியாத பிரச்சினையால் குழந்தை அலறிக்கொண்டு இருக்கிறது. தாய் செய்வதறியாது திகைத்தபடி தன் குடிகார கணவனை வசைபாடிய படியே, மடியில் குழந்தையை கிடத்தி வைத்திருக்கிறாள். குழந்தை தொடர்ந்து அலறியபடி இருக்க, அருகில் வசிக்கும் வயதான கிழவி ஒருத்தி, குழந்தை அழுவதைப் பற்றி விசாரித்து விட்டு, அவனது கணவன் இருக்கும் இடத்தைச் சொல்கிறாள். தாய், குழந்தையைத் தூக்கிக் கொண்டு அவன் இருக்கும் இடம் நோக்கி நடக்கிறாள். குட்டி சுவற்றில் உட்கார்ந்து, நண்பர்களோடு அரட்டை அடித்துக் கொண்டிருக்கும் தன் கணவனை, மருத்துவமனைக்கு அழைக்க, அவன், அவளை வசைபாடிய படியே அவளோடு கிளம்பிச் செல்கிறான். இருவரும் அருகில் இருக்கும் நகரத்திற்கு வருகிறார்கள். அவன், தன் மனைவியை ஒரு பெட்டிக்கடை முன் காத்திருக்க சொல்லிவிட்டு போகிறான். போனவன் நேராக மதுக் கடைக்குள் நுழைந்து மறைய, கணவனை எதிர்பார்த்து வெகுநேரம் காத்திருக்கும் அவளை, அருகில் இருப்பவர்கள் விசாரித்து, பக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார்கள்.<br /><br /><br />அங்கே குழந்தையைப் பரிசோதிக்கும் மருத்துவர், ""குழந்தை இறந்து வெகுநேரம் ஆகிவிட்டது'' என்கிறார். ""ஐயோ... என் புள்ள போச்சே...'' என்று அலறித் துடித்தபடி மருத்துவமனையை விட்டு வெளியே வரும்போது, அவள் எதிரே தள்ளாடியபடி வரும் கணவனை தள்ளிவிட்டு குழந்தையை அணைத்துக்கொண்டு வெளியேறுகிறாள். அவன் தெருவில் சுயநினைவின்றி விழுந்து கிடக்கிறான். பேருந்தில் பயணிக்கும் அவள் தன் குழந்தையை யாரும் கவனிக்காதவாறு, பீறிட்டுக் கொண்டு வரும் அழுகையையும் மறைத்துக் கொண்டு பயணிக்கிறாள். தனது ஊர் வந்ததும், மிகக் கவனமாக இறங்கும் அவள், பேருந்து சென்றதும் சாலையில் அமர்ந்து பெருங்குரலெடுத்து அழத் தொடங்குகிறாள். பின்னணியில் வயதான மூதாட்டியின் ஒப்பாரி அவளோடு சேர்ந்து ஒலிக்கிறது. இதயம் கனக்க வைக்கும் ஒப்பாரியோடு இருள் அவள் வாழ்வை சூழ படம் நிறைவடைகிறது.<br /><br /><br />விமர்சனம்:<br /><br /><br />மனித வாழ்க்கையில் குடியினால் ஏற்படும் பிரச்சினைகள் தொகுக்க முடியாத பக்கங்களாக நம் முன்னே விரிந்து கிடக்கின்றன. குடும்பத்திலும், சமூகத்திலும் அது தொடுக்கும் தாக்குதல்கள் மூர்க்கமானவை. குடியினால் வீழ்ந்த குடும்பங்களின் ஓலம் கிராமங்கள் தோறும் ஓங்கி ஒலித்துக் கொண்டேதான் இருக்கிறது. வாழ்ந்து கெட்ட குடும்பங்கள் என்று பேச்சு வழக்கில் பலர் பேசுவதைக் கேட்டிருக்கலாம்.<br /><br /><br />அப்படியான குடும்பங்களின் வீழ்ச்சிக்குப் பின்னணியில் பெரும்பாலும் இருப்பது குடிதான். ஒரு குடும்பத் தலைவனது எல்லை மீறிய குடியானது, குடும்பத்தின் குதுகலத்திற்கு வேட்டு வைப்பதோடு, அவனது சந்ததியினரையும் நடுத்தெருவில் கொண்டு வந்து நிறுத்தி விடுகிறது. இவ்வகையான குடும்பத்தில் வாழும் பெண் மக்களின் புலம்பல்கள், பொலிவிழந்த வீடுகளில் அழியாக் கனவுகளாக தொடர்ந்து வாழ்ந்த வண்ணம் இருக்கின்றன. குடிகாரனோடு தினம் தினம் மல்லுக்கட்டிக் கொண்டு மன உளைச்சலில் வாழும் மனைவி மார்களின் வலியும், இச்சூழலில் வளரும் குழந்தைகளின் மனோநிலையும் பதிவு செய்யப்பட வேண்டியவை. பயத்தின் பீதியில் உறைந்து போய், தனிமைப் பட்டு வாழும் அக்குழந்தைகளின் நாட்கள் கசப்பானவை. "ஒரு குடியின் பயணம்' குறும்படம் அப்படியான வாழ்க்கையிலிருக்கும் ஒரு சிறு பகுதியைத்தான் தொட்டுக் காட்டிச் செல்கிறது. தன் குழந்தையை பறி கொடுக்கும் ஒரு தாயின் மூலமாக, குடியின் மோசமான இயல்பை பதிவு செய்ய துணிந்திருக்கிறார் இயக்குனர். கிராமங்கள் தோறும் பள்ளிகள் இருக்கலாம். மருத்துவமனைகள் இருக்கலாம். ஏன், விளையாட்டுக் கூடங்களும், நூலகங்களும் கூட இருக்கலாம்.<br /><br /><br />ஆனால் மதுக்கூடங்கள் இருக்க வேண்டுமா? என்ற கேள்வியை காட்சிகளின் மூலமாக நம் முன்னே வைக்கிறார். படத்தில், தன் குழந்தை இறந்ததை அறிந்து அலறும் அவளின் குரல் மருத்துவமனையை விட்டு அவள் வெளியே வந்த பிறகும் கூட ஒலித்துக் கொண்டிருப்பதாக இயக்குனர் காட்சிப்படுத்தியிருப்பார். படத்தைப் பார்த்து விட்டு, நாம் வேறு வேலைகளில் மூழ்கியிருக்கும்போதும் கூட அவளின் அலறல் நம் காதுகளில் தொடர்ந்து கேட்டுக் கொண்டேதான் இருக்கிறது, நம்மிடம் கேள்விகளை முன் வைத்தபடி!<br /><br /><br />அறிமுகம்:<br /><br /><br />இசாக் அடிப்படையில் ஒரு கவிஞர். தமிழின் மீது திவீர ஈடுபாடு கொண்டுள்ள இளைஞர்களில் ஒருவர். துபாயில் சில ஆண்டுகள் தங்கி வேலைப் பார்த்திருக்கிறார். தமிழின் தீவிர இலக்கியவாதிகளான கவிஞர் பழமலய், கவிக்கோ அப்துல் ரகுமான், அறிவுமதி, கடற்கரய் போன்ற இலக்கியவாதிகளிடம் நெருங்கிய தொடர்பு உள்ளவர். இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு "இரண்டாவது கருவறை'.<br /><br /><br />அதைத் தொடர்ந்து சாரல் வெளியீடாக வெளி வந்தவை "காதலாகி', "மெüனங்களின் நிழற்குடை', "மழை ஓய்ந்த நேரம்' முதலியவை. இதில் "மழை ஓய்ந்த நேரம்' மட்டும் கவிஞாயிறு தாராபாரதி பரிசைப் பெற்றிருக்கிறது. இதனைத் தொடர்ந்து இவர் இயக்கிய இந்த குறும்படம் துபாயில் சமூக ஆர்வலர்களிடையே திரையிடப்பட்டதும் அதனைத் தொடர்ந்து கிடைத்த பாராட்டுக்களும் தமிழ்ச் சூழலுக்கு முற்றிலும் புதிது. இவர் விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்ப் பேட்டை அருகே உள்ள நெய்வினைக் கிராமத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தை போதை ஒழிப்பு போராளிகளுக்கு சமர்பித்திருக்கும் இவர், தற்போது புலம் பெயர்ந்த உழைப்பாளிகளின் உணர்வை மையமாக வைத்து "அந்நியம்' எனும் குறும்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். <br /><br /><br />nandri: Cinema Express<div class="blogger-post-footer">¾?¢?? ???? §????
¾?¢? ¾?? ???? §?÷</div>இ.இசாக்http://www.blogger.com/profile/14128058077624270987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13549418.post-28232995074958125872009-10-16T21:43:00.000-07:002009-10-16T21:45:25.239-07:00வாழ்க அநாகரீகம்<strong>வாழ்க அநாகரீகம்</strong><br /><br />விரும்பி பலர் <br />கடமைக்காக பலர் <br />விருப்பமில்லாவிட்டாலும் பலர் <br />ஆண்டுக்கொருமுறைத்தானென்று பலர் <br />குழந்தைகளுக்காகவென்று <br />கூட்டாளிகளுக்காகவென்று <br />எப்படியோ <br />எல்லோரும் வெடிக்கிறார்கள் <br />தீபஒளி கொண்டாட்டமென்று. <br /><br />தனிவெடி <br />சரடிவெடி <br />என்னை அதிர்வூட்டுகின்றன எல்லாவெடிகளும் <br />என் ஈழ உறவுகளின் <br />வாழ்வில் விழுந்தவற்றை நினைவூட்டி. <br /><br />விருந்தினரையும் <br />கொன்றொழிப்பேனென்ற கொழுத்த <br />நாக்குடைய ராஐபக்சே நாகரீகமானவன் <br /><br />தவறெனச் சுட்டி <br />கண்டிக்கத் துணிந்தவன் <br />அநாகரீகமானவன் <br /><br />வாழ்க <br />அநாகரீக திபஒளி கொண்டாட்டம்.<div class="blogger-post-footer">¾?¢?? ???? §????
¾?¢? ¾?? ???? §?÷</div>இ.இசாக்http://www.blogger.com/profile/14128058077624270987noreply@blogger.com