உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

அகிம்சை பேசும் அதிபயங்கரவாதிகள்.





அகிம்சை பேசும் அதிபயங்கரவாதிகள்.

சமீபகாலமாக வாயுள்ள சில உயிரினங்கள்
தங்களை அகிம்சை மூர்த்திகளாக
அடையாளம் காட்டிக்கொள்ள முயற்சிக்கின்றன.

அன்பர்கள் கவனிக்க வேண்டும்

சமீபத்தில் நிகழ்ந்திருக்கும் மாபெரும் இன அழிப்புக்கு
அகிம்சை பேசும் இந்த இழிப்பிறவிகள்
வாய் திறவாதிருப்பதற்கு முக்கிய காரணம்,
அழிப்பின் அத்தனை அசைவும்
அகிம்சா மூர்த்திகளின் துணையோடு நிகழ்ந்திருக்கிறது.

படுகொலைகளை நிகழ்த்திய அரசபயங்கரவாதிகளின்
சார்பாக எவன் எவனோ பேசுகிறான்... எழுதுகிறான்..

அழித்தொழிக்கப்பட்ட இனத்தின் சார்பில் அழக்கூட
துணிவற்ற நடைபிணங்களாக.. நாம்.

எவன் வீரன்
எவன் கோழை
எவன் சொல்வது

எல்லாம் சூழல் சொல்லும்
நாளைய வரலாறு சொல்லும்.