உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

'துணையிழந்தவளின் துயரம்' கவிதை நூலின் வெளியீட்டு விழா



என்னுடைய
'துணையிழந்தவளின் துயரம்' கவிதை நூலின் வெளியீட்டு விழா

வருகிற பிப்ரவரி 28 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை, மாலை 5.30 மணியளவில்
சென்னை தியாகராயர் நகர், 51. ஜி. என். செட்டி சாலை (பாரதிராசா மருத்துவமனை எதிரில்)
ஹோட்டல் பெனின்சுலா நிகழ்ச்சி அரங்கில்

கவிஞர் அறிவுமதி அவர்கள் தலைமையேற்கவும்
திரு அ.சாதிக் பாட்சா அவர்கள் வரவேற்புரை ஆற்றவும்

கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் நூலை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கவும்
மதுரா பாலன்,
கவிஞர் சேதுகுமணன்
ஆகியோர் நூலைப் பெற்று வாழ்த்தவும்

திரு தமிழ்முழக்கம் சாகுல் அமீது
திரு இனியவன் ஹாஜி,
திரு மின்வெளி தனபால்
திரு கீற்று இரமேஷ் ஆகியோர் சிறப்புப்பிரதிகளை பெறவும்

கவிஞர் பழநிபாரதி,
இயக்குநர் மீராகதிரவன்,
திருமதி நங்கை குமணராசன்
திரு வன்னிஅரசு,
ஆகியோர் கருத்துரை வழங்கவும்

ஒப்புதல் அளித்துள்ளார்கள்...
நீங்களும் அவசியம் இந்நிகழ்வில் பங்கேற்று சிறப்பிப்பீர்கள் என நம்புகிறேன்.

தங்கள் வருகையில் மகிழும்
இசாக் மற்றும் உறவும் நட்பும்