தமிழ் அலை பணித்தொடக்க நிகழ்வு
தமிழ் அலை ஊடக உலகத்தின் பணித்தொடக்க நிகழ்வு சென்னை சைதாப்பேட்டையில் 15.02.2009 ஞாயிறு காலை நடந்தது.
இந்நிகழ்வில் கவிக்கோ அப்துல்ரகுமான் அவர்கள் கணினிகளை இயக்கி பணியை தொடங்கிவைத்தார்.
கவிச்சித்தர் மு. மேத்தா, இலட்சியக்கவி அறிவுமதி, தமிழ்நேயர் சேதுகுமணன், பெனின்சுலா குமார் கியோர் தமிழ் அலை நிர்வாகத்தினரை சிறப்பித்து வாழ்த்தினர்.
ஜெம் சாதிக்பாட்சா, தமிழன்பன், கீற்று இரமேஷ், அபுல்கலாம் ஸாத், பெங்களூர் முல்லைக்கோ, சையது முகம்மது, அன்சாரி, நண்பர் தமிழன்பு, அமிர்தம் சுந்தர் உள்ளிட்ட அன்பர்கள் பங்கேற்று உற்சாகப்படுத்தினர்.