உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

உழைப்பாளியின் வியர்வைக்குறிப்புகள்


கால்சட்டைக்கால குறிப்புகள்

கால்சட்டைக்கால குறிப்புகள்

1
ள்ளிக்கூட இடைவேளை நேரத்தில்
சிவன்கோயிலினுள்
நானும் ரவியும்
பதுங்கிக்கொள்வோம்
உள்ளே சுற்றித்திறிந்து
தேடிப்பிடித்து மகிழ்வான் தாமஸ்


2
வெளியூரிலிருந்து
செங்கல்சூளைகளுக்கு
கல் அருக்க
வந்தவர்களுக்கு
வாய்த்ததெல்லாம்
வெய்யிலும்
மழையும்தான்


3
பெரிய ஏரியின்
மீன் பிடித்திருவிழாவில்
கால்சட்டைப் பைகளுக்குள் பதுங்கிய
மீன்களின் பெயர்களும்
நினைவில் இல்லை இன்று
எல்லாவற்றையும்
மீன்கள் என்றே
சொல்லிப்பழகிக்கொண்டேன்


4
ரி கோடிபோகும் நாளில்
கிடைக்கும்
பள்ளி விடுமுறைகளை
விழுங்கிக்கொண்டு
எழுந்து நின்றது
புதிய பாலம்


5
டிவிளையாடிய போது
கால்களை பழுதாக்கிய கருவேலமரங்களும்
துள்ளத்துள்ள ரசித்தாலும்
நெருங்கிய கையில் குருதி பார்த்த
கெளுத்திமீன்களும்
எதிரிகள் என்று
அப்போதெனக்கு தெரியாது

நன்றி : தாமரை அக்டோபர்

கால்சட்டைக்கால குறிப்புகள்

கால்சட்டைக்கால குறிப்புகள்
இசாக்

1
டைமழை வெள்ளத்தில்
அடித்துக்கொண்டுவந்த
கப்பல்
கவிழ்ந்துக் கிடந்தது
எங்கள் வீட்டுவாசலில்
யார் விட்டதாக இருக்கும்?

2
ய்யனார்கோயில்
இளுப்பைத் தோப்பில்
மரம் ஏறி
பழம்பறிக்க உதவிய கல்குதிரை
பறித்துப்போட்ட கிளி
அஃரிணைகளாகவா இருக்கும்?

3
புதிதாக வாங்கிவந்த
சிப்பாய் பொம்மையின் முன்னிலையில்
காணாமல் போனது
என் பென்சிலும் அழிப்பானும்
சிப்பாய் என்றாலும்
பொம்மை பொம்மைதானே

4
ந்திரா காந்தி
சுடப்பட்டு இறந்த அன்று
குடும்பமே தெருவில் நின்று
கதறி அழுத்து
எங்கள்
வீடு
தீப்பற்றி எரிந்ததால்.

5
ண்டைக்காரன் வீட்டு கொள்ளையில்
கரும்பு உடைத்துத் தின்றதை
எப்படி மறுத்தாலும்
நம்ப மறுப்பார்
கிழிபட்ட உதடுகளைப் பார்த்த அப்பா

நன்றி: கல்கி, அக் 16

சூரியன்கள் ஒளிகுடித்த நிலாச்சோலை

 

சூரியன்கள் ஒளிகுடித்த நிலாச்சோலை

#


எப்போதோ நிகழ்ந்தது
இப்போது நடந்ததைபோல
பசுமையாக நினைவில்

தமிழோசை
அரங்கேற்றம் அலுவகத்திற்கு
அருகெதிரில்
73 அபிபுல்லா சாலை

தான் இயக்கவிருந்த
“உள்ளேன் அய்யா” தொடக்கப் பணியில்
அண்ணன் அறிவுமதி
மூழ்கியிருந்த தருணம்
“உள்ளேன் அண்ணா” என
தம்பியாகி நெருக்கமானேன்.

பல துறைகளில்
இப்போது வெளிச்சப்பட்டுவிட்ட
பல முகங்கள்
அங்கே
அங்குமிங்கும்
அலைந்துத்திரிந்த பரபரப்பு.

முன்னோடி படைப்பாளிகள்
“தம்பி” என்றும்
துளிர் படைப்பாளிகள்
”அண்ணா” என்றும்
அன்பு தெளித்து
அழகுத் தமிழ் வரைந்த
சாரல் வீசும்
தொன்ம வாசல்

மெட்டு ஏர் பிடித்து
ஒழுங்குமாறாமல்
சொல்கள் தூவி
நல்லத் தமிழ்ப் பாடல்களை
விளைவித்த நிலம்.

நூல்கள்
புதிய வடிவில்வர
உறவுகள் கூடி
இரவுகளைத்திண்று
இலக்கிய விருந்து
சமைத்த பொழுதுகள்.

தாய்மைத் ததும்பும் அன்பும்
ஆத்திரம் மிக்க கொள்கைக் கோபமும்
சமவிகிதத்தில்
பரிமாறப்பட்ட
உன்னதக்கூடம்.

வயதில் முதியவரெனில்
”வாங்க அண்ணா” என்றும்
இளையவரெனில்
“வாங்க தம்பி” என்றும்
உள்ளே அழைத்து
உறவாக்கிக்கொள்ளும்
உயிர்பிழியும் தமிழ்க்குரல் ஒலிக்கும்
அற்புத அறை

அண்ணை
தம்பிகளைப் பிரசவித்த
அதிசய
வைத்திய சாலை
73 அபிபுல்லா சாலை.

பொருள்களையும் மனிதர்களையும்
வழியனுப்பிவிட்டு
நினைவுகளையும் உணர்வுகளையும்
நிறைத்துக்கொண்ட
189 அபிபுல்லா சாலையில்
அசையா உயிராகவும்
அப்பழுக்கற்ற உறவாகவும்
எங்களில் கலந்திருந்த
பூவரசும் வேப்பமும்
இப்போதும்
நிழல் தர காத்திரும்
இளைப்பாற
ஆயத்தமா?


இசாக்
29, திசம்பர் 2013