உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

இருத்தல்

பதுங்கியிருந்து
வழக்கம் போல இன்றும்
வந்தது
சூரியன்

பக்கத்து வீட்டின்
காப்பாற்றக்
கோரும்
பரிதாபக் குரலுக்கிடையே
நிலா இரசித்து
உறங்கி
எழுந்து
நாகரிகத்தின் உச்சமாக
''குட் மார்னிங்''
சொல்லிக்கொண்டோம்
கூச்சமின்றி.