உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

தொலைவு

தினம் தினம்
தூசுகளோ
கறைகளோ
இருக்கிறதோ இல்லையோ
தூய்மைப்படுத்துவது வேலையாகிவிட்டது
அவனுக்கு.

மேகம் உரச நீண்டு வளர்ந்த
கண்ணாடிச்சுவர்களில்
வானம் பூசியபடி
உயர உயரத்திற்கு மேலெழுகிறான்
இயந்திர உயர்த்தியில்.

கடமை முடித்த
கட்டிடத்தின் உச்சியிலிருந்து
துணையிழந்த தருணங்களில்
கிழ்நோக்கி
வீசுகிறான் பார்வையை
அதிர்ச்சியூட்டும் தொலைவில்
தொடக்கப்புள்ளி
அவன்
வாழ்வும் கூட.!
*