உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

தோழமைகளின் தூரம்

தோழமைகளின் தூரம்

என்னை
அப்படியே அனுமதிக்கமுடிவதில்லை
உங்களால்.

உங்கள்
எண்ணப்படி
சும்மா இருக்கவும் முடிவதில்லை
என்னால்.

நான் வசதியற்றவன் என்பதால்
உன்
வசதிக்கேற்றார்போல
மாற்ற முயலுகிறாய்.

பல கோடி திட்டத்திலானது
உன் விழா
தெருக்கோடி கூட்டமே
என் விழா.

தோழனே
நாம்
நல்ல நண்பர்களாக தொடருவோம்
காந்தத்தைப் போல.