சிறகற்ற பறவை
உடலொன்று
கட்டிலில் கிடக்கும் எதுவுமற்று
இரவுகளில்
நாட்டை
வீட்டை
உறவுகளைத் தேடி
பறந்துப் பறந்து
சோர்ந்து
மீண்டும் கூடுசேரும் தருணம்
சடங்காக
எப்போதும் போல
விடியும் பொழுது.
தனித்து
வாழ துணிந்த அன்றே தொடங்கியது
நேற்றும்
இன்றும் தொடர்கிறது
நாளையும் தொடரக்கூடும்
இந்த சிறகற்ற பறவையின்
பயணமற்ற பயணம்.