உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

எப்போதும் போலல்லாமல்

எப்போதும் போலல்லாமல்
உன் நியாயமற்ற
உழைப்புத்
திருட்டுக்கு பலியாகி
ஏழ்மையின்
எல்லையில் வாழும்
கதறியழும்
கருத்த உருவம்
அதிர்ச்சியூட்டும்
சொல்லாயுதத்தோடு
நெருங்கிவர நீயுணர்வாய்
தனித்துறங்கும்
நள்ளிரவு பேரமைதியின் மெய்யழிந்து