உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

வாழ்க அநாகரீகம்

வாழ்க அநாகரீகம்

விரும்பி பலர்
கடமைக்காக பலர்
விருப்பமில்லாவிட்டாலும் பலர்
ஆண்டுக்கொருமுறைத்தானென்று பலர்
குழந்தைகளுக்காகவென்று
கூட்டாளிகளுக்காகவென்று
எப்படியோ
எல்லோரும் வெடிக்கிறார்கள்
தீபஒளி கொண்டாட்டமென்று.

தனிவெடி
சரடிவெடி
என்னை அதிர்வூட்டுகின்றன எல்லாவெடிகளும்
என் ஈழ உறவுகளின்
வாழ்வில் விழுந்தவற்றை நினைவூட்டி.

விருந்தினரையும்
கொன்றொழிப்பேனென்ற கொழுத்த
நாக்குடைய ராஐபக்சே நாகரீகமானவன்

தவறெனச் சுட்டி
கண்டிக்கத் துணிந்தவன்
அநாகரீகமானவன்

வாழ்க
அநாகரீக திபஒளி கொண்டாட்டம்.