“உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.” – ரசூல் கம்ஸதோவ்
மிரட்டல்
மிரட்டல்
என்னை
அச்சமூட்டுவதற்கென
சிலரை
காலம்
உருவாக்கிவிட்டிருக்கிறது
முன்பெல்லாம்
பள்ளி ஆசிரியர்
பணியிட முதலாளி
என பலருண்டு.
இப்போது
வாடகை வீட்டு உரிமையாளர்.