குருதிநெடி
செவிவழிச்செய்திகள்
அலைபேசி அலறல்கள்
புகைப்பட ஆதாரங்கள்
அச்சிட்ட நூல்கள்
காணொளிப் பதிவுகள்
தொலைக்காட்சித் தொகுப்புகள்
மொழிப்பெயர்ப்புப் பதிப்புகள்
எல்லாம் குருதிநெடி குறையாமல்
எங்கள் முன் இருந்தன
நேற்று.
எல்லாமும்
எங்களின் முன்
நிகழ்ந்து முடிந்தன
முந்தினநாள்.
அழவும்
ஆதாரங்கள் தேவை என்றோம்.
ஆதாரத்தேடலில்
ஆத்மசோகம்
அழிந்துப்போயின.
எங்கள் வலிகளும்
பலமானவன் சொன்னால்தான்
உணரமுடியும் என்றாகிவிட்டன இப்போது.
காகிதங்களைப்
புரட்டிக்கொண்டு
கருத்துச்சொல்ல முனைகின்றோம்
மனிதம் செத்துப்போயிருந்தது.
சாவுகளுக்கு அழலாம்
காவுகளுக்கு?
நன்றி : தாமரை