1
நம் சிரிப்புகளையெல்லாம்
அடமானம் வைத்து நெடுநாட்களாகிவிட்டன
நினைவிருக்கிறதா உனக்கு
நம் வீடுகளில்
''காந்தி'' சிரிக்க வேண்டுமென்று.
2
கட்டிலில் குடும்பம் நடத்துகிறார்கள்
எல்லோரும்
நாம்
கட்டிலோடு
குடும்பம் நடத்துகிறோம் சலனமற்று.
3
வாழ்க்கையில்
விடுமுறை நாட்கள் வரும் போகும்
அனைவருக்கும்
விடுமுறை நாட்களில் தான்
வந்து போகிறது
வாழ்க்கை
நமக்கு.
4
என்னை நீயும்
உன்னை நானும்
தீவிரமாக நேசிக்கத் தொடங்கிய
கணங்களிலிருந்து தொடங்கிவிட்டது
அவரவர் மீதான
அதிகபடியான கவனம்.