5
அந்த மூன்று நாட்கள் பற்றியான
அங்கலாய்ப்புகளால்
நிரம்பி வழிகிறது பெண்களுலகம்
ஆண்டு முழுவதும் மூன்று நாட்களான
சோகத்தை
யாரிடம் சொல்லியழுவாள் அவள்.
6
பிரிந்திருப்பதென்பது
பெருமை தருவதன்றுயென்றாலும்
எவராலும்
இழப்பைச் சொல்லிக்கொள்ள முடிவதில்லை
இயல்பிழந்துவிட்ட
நாகரீக உலகில்.
7
''அடிக்கடி தொலைபேசி செய்''யென்கிறாள்
''வாழ்க்கையில்
வேறு வேலையில்லையா எனக்கென்கிறேன்.
என்
தொலைபேசியால்
வாழ்ந்துக்கொண்டிருக்கிறாள் என்பதுணராமல்.