நவீன யுக்திகளோடு
வாழ்வனுபவங்களின் பொருளுணர்த்தும் கவிதை
இவணுடையதென அடையாளப்பட
இச எழவுகள்
எதுவுமறியாவிட்டாலும் இளித்து நிற்கவேண்டும்,
அப்படியிருக்க அறியாதவன் நான்.
சொற்ப சொற்களுக்குள்
வாழ்வின் சூட்சுமம்
வைத்தெழுத தெரிந்தவனென அறிமுகமாக
எப்போதும் போதையிலிருக்கும்
நல்ல்ல்ல குடிகாரனாயிருக்க வேண்டும்,
இதுவும் எளிதானதல்லயெனக்கு.
அமரத்துவம் பெற்ற கவிதைகளை
அள்ளி அள்ளித் தருகிற ஞானகிறுக்கனென
பீடப் புகழுரைகள் பெற்றிட
மது அருந்துபவர்
ஒழுங்கீனர், தீண்டத்தகாதவர்
என்றொதுக்கி வைப்பவனாகவாவது இருக்கவேண்டும்,
குடி பழக்கமுடையவர் பலருண்டு
எனக்கு நெருக்கமானவர்களாக.
எந்த எல்லைக்குள்ளுமில்லாத என்னை
கவிஞனென்று சொல்லுகிற துணிவு எவனுக்குண்டு
என் நண்பர்களை தவிர