உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

கொண்டாட்டம்

என் நண்பனின் வீடு
குழந்தையின்
பிறந்த நாள் கொண்டாட்டமென்பதாக தான்
அழைத்திருந்தார் அனைவரையும்
கூடியிருந்தவர்களும் அதற்காகத்தான்!

அலுவல்
அரசியல் அரட்டையென்று ஆண்களும்
ஆடை
அலங்காரம்
சமையல் செய்திகளென பெண்களும்
அணிப் பிரிந்து பொழுது கழித்தனர்
அவரவர் விருப்பபடி

எதைப் பற்றியும் கவலைப்படாமல்
எப்போதும் போல
மகிழ்ச்சியாய் விளையாடிக் கொண்டிருந்தாள்
குழந்தை
கரடி பொம்மைகளோடு!