“உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.” – ரசூல் கம்ஸதோவ்
தேவையுணர்தல்
கட்டட கட்டுமான பணியின்போது கோடையின் கொடும் வெயில் தாங்கமுடியாமல் சுருண்டு விழுந்து செத்து போன கூலி தொழிலாளி கொடுத்து வைத்தது அவ்வளவுதான்.
கோடை வரும்முன் தனி வானூர்தியேறி தூரத்து குளிர்தேசம் சென்று ஓய்வெடுக்க துபாய் இளவரசனின் பந்தயக் குதிரையா இவண்.