ஆசைகள்
எண்ணங்கள்
தேவைகள்
எல்லாமும் குயில் முட்டைகளாய்
புலம்
பெயர்ந்தவனுக்கு.!
*
துபாய் நகரின்
ஏதாவதொரு தெருவில்
ஏதாவதொரு சாலையோரத்தில்
எப்பொதும்
ஏதாவதொரு தொழிலாளி
சுயநினைவற்று கிடக்கிறான்
போதையில்.
*
மாமியார் என்ன சொல்வாரோயென்கிற
அச்சம் அவளுக்கு
தொலைபேசி கட்டணமெவ்வளவு ஆகுமென்ற
கவலை கலந்த சிந்தனை எனக்கு
இவற்றுக்கிடையில்
என்ன பேசிவிடமுடியும் மகிழ்வாக.
இருந்தும்
அடிக்கடி நிகழ்கிறது இப்படியான பேச்சு.!
*
வேலைகளுக்கென
துபாய் வந்துவிட்ட பின்னும்
ஆழ்ந்த உறக்கத்திற்கிடையில்
மிரட்சியோடு விழித்தெழுகிறேன்.
பள்ளிக்கூடம்
செல்வதைப் போன்று கனவு கண்டு.!
#