உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

அறிதல்

சாதித் தமிழா
உன் வாரிசுகள் வெளிநாட்டானின்
கழிவுகளை தூய்மை செய்துக் கொண்டிருக்க
நீ
உடன்பிறந்தானின்
வாயில்
கழிவுகளை திணித்துக் கொண்டிருக்கிறாய்.

விருந்தினருக்கும்
உள்ளவற்றில் நல்லவற்றையளிப்பது
தமிழர்மரபு
முதலில் நீயொரு மனிதனா?
#