நாட்டுக்குள் புகுந்தவர்கள்
வளத்தையும்
பின் வாழ்வையும் சூரையாடினார்கள்.
குடும்பத்தவர் பிழைத்திருக்கவேண்டி
கடல் கடந்து
கூலிகளாகி தனிமையில் தவிக்கிறோம்
நாங்கள்.
உறவுகளென்று
ஒருவரும்
தப்பித்திருக்காதபடி
ஊர் புகுந்து சூரையாடிவிட்டாயே
கடலே.!
#
சுனாமியின் போது எழுதியது