எப்போதோ
ஓர் அவசரச் சூழலில் அறிமுகமானவர்களும்
மிக நெருக்கமாகவும்
நெகிழ்வாகவும் விசாரிக்கிறார்கள்
சில ஆண்டுகள்
இடைவெளிக்கு பிறகான சந்திப்புகளில்.
நிறைய நிறைய
பேசுகிறார்கள்
விவாதிக்கவும் செய்கிறார்கள்
முன்பெல்லாம்
முகங்கொடுத்தும் பேசத் தயங்கியவர்கள்.!
இப்போதும் கூட
பேசவும்
விசாரிக்கவும்
என்னிடம் எதுவுமிருப்பதாக தெரியவில்லை
அவர்களுக்கு
துபாய் சென்றுத் திரும்பிய
செய்திகளை தவிர.!