உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

மணல்பேச்சு

வெறித்த பார்வையில் வார்த்தைகளின்றி
விழிநீர்வழி கரையும்
இணையின் இணை காணுதற்கான
ஏக்கம்.

அடையாளச் சந்திப்பிற்காக
காத்துக் காத்து
கானலாகிப் போகும்
வாரிசின் எதிர்பார்ப்பு.

பேசிப் பேசி இரவுகளைத் தின்ற
நிகழ்வுகள்
திரும்பும் நாட்களுக்காய்
தாகித்திருக்கும்
நட்பு.

எதையும் மறக்கவியலா மன வேதனைகளோடு
உயிர்த்தலுக்கான நகர்தலில்
ஆறுதலாய்
அவ்வப்போது அமைந்துவிடுவதுண்டு
பாலை
மணல் பேச்சு.