உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

விளம்பரங்களில் விழுந்த வாழ்க்கை

யாருக்கும்
வாய்க்காதது தான்
ஊடகங்கள் பரிந்துரைக்கும்
எல்லாவற்றையும்
வாங்கி
பயன்படுத்தி வாழ்வதென்பது
கூடுதல் சிரமம்
கூலித்தொழிலாளியாக கடல்கடந்தவனுக்கு.

மீண்டும்.. மீண்டும்
தொலைத்தெடுக்கிற
விளம்பர யுக்திகளுக்கு பலியாகிவிடாமல்
நாமிருக்கலாம்
நம்மைச் சார்ந்தவர்கள்..?

விளம்பரங்களெதையும்
நம்பாமல்
வாழக்கோரும்
விளம்பரமொன்றை எடுத்தளிக்க
யாரும்
வரமாட்டார்களா?