உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

வெளிச்சமாய்

மின் விளக்கை
அனைத்தார் தந்தை
மின்சார சிக்கனம்.

சிறியதாய் எரிந்த
சிமிள் விளக்கை அனைத்தாள் தாய்
சீமையெண்ணை சிக்கனம்

மீறி எரிந்த
மெழுகுவர்த்தியையும் அனைத்தான்
அவன்
விட்டில்பூச்சிகள் சாகிறதாம்.!