உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

விடுதலை

பூங்கா
அருங்காட்சியகம் இவை மட்டுமின்றி
இப்போது புதிதாக
வெளிநாட்டு பறவைகள்
வந்திருக்குமிடம் பற்றியும்
சொல்லிச் செல்கிறார்கள்
பார்த்து வந்தோர் பலர்.

செய்தி தாள்களும்
வண்ணப்படங்களுடன் கதைவிடுகின்றன
சுற்றிப்பார்த்தலின் சுகங்கள் பற்றி.

எனக்கும்
இல்லாமலில்லை
சென்று பார்க்கும் ஆசை

விரும்பியபடி
சென்று
பார்த்து ரசித்து திரும்ப
ஒப்பந்தக் கூலிகாரனுக்கும்
வாய்க்க வேண்டும்
பறவைகளைப் போல
சுதந்திரமான
வாழ்க்கை.