உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

பார்வை

ஒப்பனையோ
ஒப்பேற்றல்களோ எதுவுமின்றி
நிர்வாணமாக
கூச்சமற்று அறிமுகப்படுத்திக்கொள்கிறேன்
ஒளிவுமறைவற்ற சொற்களால்.

கேலியாகவும்
கிண்டலாகவும்
பேசுகிறாய்சிரிக்கிறாய் வெட்கமின்றி

பொய்களுக்குள்
உன்னை புதைத்துக்கொண்டு.