உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

தகுதியுடைமை

தகுதியுடைமை

ஒரு வேளை சோற்றுக்கும்
வழியற்று நகரும்
உன் வாழ்வை
மாற்றியமைத்திட
அணுவளவும் முயலாத
நான்

ஒரு மாதம் நோன்பிருத்தலின்
சிறப்பை
எப்படி சொல்வேன்
உனக்கு