உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

சென்னையில் இருந்து தமிழ் அலை






சென்னையில் இருந்து தமிழ் அலை

அன்பு நண்பர்களுக்கு

புலம்பெயர்ந்து வாழுகிற நண்பர்களில் பலர் சமூக உணர்வோடு இணையங்களில்
எழுதியும், இயங்கியும் வருகின்றனர். அவற்றில் பல அச்சு நூல்களாகி தமிழ்
மக்களின் பார்வைக்கு செல்ல வேண்டிய தகுதி மிக்கவை. அப்படியான தகுதியோடு
எழுதுகிற தோழர்களின் கருத்துகள் அச்சு நூல்களாக தமிழ் உலகின் பார்வைக்கு
செல்ல முழுமையான பங்களிப்பை அளிக்கும் நோக்கில் தொடங்கப்பட்டது தான்
தமிழ் அலை ஊடக உலகம்.

விரைவில் செந்தமிழ் நாட்டின் தலைநகரான சென்னையில் இருந்து தமிழ் அலை
செயல்பட உள்ளது என்பதை மிகுந்த மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆர்வமிக்க அன்பர்கள் தொடர்புக்கொளுங்கள்.

ஆலோசனைகளையும் ஆதரவையும் வழங்குங்கள்

மிக்க தோழமையோடு
இசாக்
தமிழ் அலை

--
I.Ishaq
Thamiz Alai Media World
http://www.thamizalai.blogspot.com
Cell: +91 9786218777
+971 50 4804113
+971 55 4804113