உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

தாயகப் பயணம்



தாயகப் பயணம்

அன்பிற்கினிய தோழர்களுக்கு


சில ஆண்டுகள் வளைகுடா நாடுகளில்
வாழ நேர்ந்து திசம்பர் 26ஆம் நாள்
தாயகம் திரும்ப உள்ள நான்..

என் இலக்கியப் பணிகளுக்கும் அரசியல் சார்ந்த நிகழ்வுகளுக்கும்
ஆதரவும் ஆலோசனைளும் வழங்கி துணைப்புரிந்த தாங்களை என் வாழ்நாளில்
மறக்கவியலாத உறவாக கருதி மகிழ்கிறேன்.

தங்களின் தூய அன்புத்தோய்ந்த ஒத்துழைப்பிற்கும், நேசிப்பிற்கும்
அன்புநிறை நன்றிகள் ஆயிரம்.

இணைய தளத்தின் மூலம் அறிமுகமாகி மின்னஞ்சலில் நட்பைத் தொடரும்
தோழர்கள் தமிழகத்தில் என்னோடு தொடர்பில் இருக்க விரும்பினால் தங்களது
அலைப்பேசி எண்ணை எனக்கு அனுப்புங்கள் அல்லது கீழுள்ள எனது அலைப்பேசி எண்களுக்கு தொடர்புக்கொள்ளுங்கள்
அலைப்பேசி: 9486838801
9786218777

அச்சுப் பணிகள் சார்ந்த அனைத்து தீர்வுகளுக்கும்
உதவும் வகையில் சென்னையின் சைதை பகுதியில்
தமிழ் அலை ஊடக உலகம் என்னும் பன்னூடகப் பணிகளுக்கான
நிறுவனம் ஒன்றை தோழர்களின் துணையோடு
தொடங்க திட்டமிட்டு அதற்கான ஆயத்தப் பணிகளும்
நடந்து வருகின்றன.

வருகிற சனவரி திங்களில் சென்னை பணியகம் செயல்பட
தொடங்கும் என்பதை மிகுந்த மகிழ்ச்சியோடு
தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அழகிய வடிவமைப்பு, தரமான நேர்த்தியான அச்சாக்கம் மற்றும்
புலம்பெயர்ந்த உறவுகளின் சிந்தனைகளை தமிழ் இலக்கிய தளத்திற்கு
முறையாகவும் முழுமையாகவும் அறிமுகப்படுத்தும் முயற்சிகள் என
தமிழ் அலையின் பணிகள் விரிவானவை.

என் மீது மிகுந்த அன்பும், என் வளர்ச்சியில்
முழுமையான அக்கறையும் கொண்ட தாங்கள்
எனது இம்முயற்சிக்கும் முழுமையான ஆலோசனைகளையும், ஆதரவையும்
வழங்கி வளர்த்தெடுப்பீர்கள் என்ற நம்பிக்கையில்..

மிக அன்புடன்
இ. இசாக்
அலைப்பேசி:9486838801
9786218777