ஞெகிழி குவளையில்
சூடான தேனீரை நிரப்பியபடி
தொடங்குகிறாய்
உன்
குளிர்ச்சியான பேச்சை.
தீதொன்றும் அறியாத
எனக்கு
நச்சுத்தெரிக்கும் சொற்கள்
அடையாளப்படாமலே
காற்றில் கலந்தழிகின்றன.
என்னை கடந்துவிட்ட
சூழ்ச்சிகளை
தேடும் முயற்சியில்
புதிய தாக்குதல்களுக்கும்
எதிர்வினையாற்ற
இயலாதவனாகி நிலைகுளைகிறேன்.
பழையன மறந்து
ஆயத்தமாகவே உள்ளேன்
இனி
உன் தாக்குதல்
எத்திசையிலிருந்து வந்தாலும்
சந்திப்பேன்.