உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

முரண்

1
சிக்கனம்
சேமிப்பு
எதிர்காலமென அறிவுரைகளை
அள்ளி வீசுகிறாள் என் துணைவி
புதிய புடவைக்கான கோரிக்கையோடு.

அலமாரியில் தூங்கும் பட்டுபுடவை
பயன்படுத்தபடாத கூடுதல் புடவைகள்
பற்றிய எந்த கருத்துகின்றி!
#

2
எங்கே போனாய்?
எப்போது வந்தாய்?
என்ன செய்தாய்?
அடுக்கடுக்கான
வினாக்களுக்கு விடை கேட்கிறேன்.

என்னை பற்றி
நீ
எதுவும் கேட்க கூடாதென்கிற
கட்டளையோடு!
#