உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

இசாக்கின் ஒரு குடியின் பயணம் குறும்படம் திரையிடல்,


இசாக்கின் ஒரு குடியின் பயணம் குறும்படம் திரையிடல்,

அன்பிற்கினிய நண்பர்களே
மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு சந்திக்கும் வாய்ப்பு வாய்த்திருக்கிறது.
ஆம்.. எனது குறும்படமான ஒரு குடியின் பயணம் திரையிட உள்ளோம் துபாயில்.
இந்த சூழலில் இப்படம் உருவாக துணை நின்ற நண்பர்களை நன்றியோடு நினைக்கிறேன்.

ஒளிப்பதிவாளர் நண்பர் கவின், படத்தொகுப்பாளர் பா. அரிகோபி, இசையாளர் ரசினி, தயாரிப்பில் துணை நின்ற வ.ச.சுரேசு குமார் என அனைத்து உறவுகளுக்கும் என் அன்பு நன்றி.

அமீரகத்தில் வசிக்கும் நண்பர்கள் அவசியம் கலந்துக்கொண்டு ஊக்கமளியுங்கள்.

இசாக்கின்
ஒரு குடியின்
பயணம்

குறும்படம் திரையிடல்,குறுந்தகடு வெளியிடல்.

நாள்: 04-01-2008 வெள்ளிக்கிழமை, மாலை 5.30 மணி
இடம்: சிவ் ஸ்டார் உணவகம்- கராமா, துபாய்

அனைத்து தோழர்களும் நண்பர்ளுடன் பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறோம்.

அன்புடன்
துவக்கு இலக்கிய அமைப்பு
தாய்மண் வாசகர் வட்டம்
050 5823764- 050 7763653